தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக விளங்கி வருபவர் நடிகர் விஜய்.தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி அண்டை மாநிலங்களிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கேரளாவில் இவருக்கு பல ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கேரள நடிகை ஒருவருக்கும் நடிகர் விஜய் என்றால் கொள்ளை பிரியம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை மிஞ்சுமா மோகன். இவர் தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா ‘ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானவர். அந்த படத்திற்கு பின்னர் ‘சத்ரியன், இப்படை வெல்லும்’ போன்ற படங்களில் நடித்துளளார். அதன் பின்னர் தமிழில் வேறு எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்கவிலை.

பெருமைப்பிலும் சினிமாவில் நடிக்கும் நடிகைகளிடம் விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்விகளை கண்டிப்பாக கேட்டுவிடுவார்கள். அதே போன்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை மஞ்சுமா மோகனிடம், நடிகர் விஜய்யை பற்றி கேட்கப்பட்டது. இதற்கு ‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் சார் தான்.

Advertisement

Advertisement

அவரை திரையில் பார்த்தாலே எனக்கு புல்லரித்துவிடும். எனக்கு அவரை சின்ன வயதில் இருந்தே மிகவும் பிடிக்கும்.’ என்று மிகவும் நெகிழ்ச்சியாக பதிலளித்துளளார். தற்போது அம்மணிக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை , மலையாளத்தில் ‘ஜம் ஜம் ‘ படத்தில் நடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement