தனது தந்தையுடன் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மாரிசெல்வராஜ். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்துஇருந்தனர். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருந்தார். படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

Advertisement

இதனைத்தொடர்ந்து இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார்.மேலும், இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருந்தது.

பொதுவாக ஒருபடம் திரையரங்கில் வெளியான போது வரும் விமர்சனங்களை விட அதே படம் Ottயில் வெளியாகும் போது தான் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும். அந்த வகையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டதை விட தற்போது தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக நடித்த பகத் பாஸிலின் கதாபாத்திரத்தை ஹீரோ போல மாற்றி பல்வேறு நடிகர்களின் பாடல்களை எடிட் செய்து ஒரு சிலர் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

மாரி செல்வராஜின் தந்தை :

இப்படி ஒரு நிலையில் தனது தந்தையுடன் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். நம் மாமன்னனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட என்னுடைய மாமன்னன்’ என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய மாரிசெல்வராஜ் ‘ தேவர்மகன் படத்தை பார்த்து தான் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை இயக்கினேன்.

Advertisement

மாரி செல்வராஜின் அடுத்த படம் :

தேவர் மகனில் இருக்கும் இசக்கி தான் மாமன்னன். அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும். அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிய போது எடுத்த படம் தான் மாமன்னன் என்று கூறி இருந்தார். இவரின் இந்த பேச்சு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. மாமன்னன் படத்தை தொடர்ந்து தற்போது மாரிசெல்வராஜ் துருவ் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement