நயன்தாரா குறித்து நடிகை மாளவிகா மோகனன் கேலி செய்துள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையில் ஒரு நடிகையாக இருந்து கொண்டு தனக்கான ஒரு இடத்தை பிடிப்பது எல்லாம் ஒரு நடிகையாக அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்த நயன் பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதேபோல இவர் லீடு ரோலில் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதனால் வருடத்திற்கு ஒரு படமாவது லீடு ரோலில் நடித்து விடுகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா நடித்த கதாபாத்திரம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் கேலி செய்ததாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார். கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை கண்ட பின்னர் தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது.தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் ‘தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையைப் அப்படி பார்த்திருக்கிறேன், ஒரு மருத்துவமனை காட்சியில், அவர் கிட்டத்தட்ட இறந்து கொண்டிருக்கிறார், ஆனால், முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, என்று இருப்பார். அதை பார்த்த போது எப்படி ஒருவர் இறக்கும் நிலையில் லிப்ஸ்டிக்கோடு இருப்பார் என்று தான் தோன்றியது.
அது ஒரு கமர்ஷியல் படமாக இருந்தாலும், நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றாலும், அது கொஞ்சம் யதார்த்தமாக இருக்க வேண்டும் இது கொஞ்சம் லாஜிக்கை மீறி இருந்தது என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை கண்ட பலரும் மாளவிகா நயன்தாராவை தான் குறிப்பிடுகிறார் என்றும், நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தில் தான் நடிகை நயன்தாரா இப்படி இருப்பார் என்றும் கூறி வருகின்றனர்.