சத்தியராஜ் மகனாக நடித்த சிறுவன் தான் தற்போது அடுத்த சாட்டை படத்தில் நடித்துள்ளாரா? யாருனு பாருங்க.
அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் "அடுத்த சாட்டை". இந்த படத்தில் மாஸ்டர் கௌஷிக் நடித்து உள்ளார். மேலும், கௌஷிக் சினிமா துறையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் பிரேமின் மகனாவார். கௌஷிக் ஏற்கனவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு சாய் சுரேஷ் இயக்கத்தில் வெளி வந்த படம் "குங்குமப் பொட்டுக் கவுண்டர்". மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ரம்பா, கவுண்டமணி, கரன், கௌசல்யா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். அதோடு இந்த படத்தில் சத்யராஜுக்கும் ரம்பாவுக்கும் மகனாக கௌசிக் நடித்து இருந்தார். மேலும்,இந்த படத்தில் கௌஷிக் க்ளைமாக்ஸ் காட்சியில் பேச முடியாத குழந்தை பேச நினைக்கும் போது எவ்வளுவு கஷ்டப்படுமோ அந்த அளவிற்கு எக்ஸ்ட்ராடினடியா நடிப்பு இருந்தது. இந்த முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு செம்மையாக இருந்தது. அதற்கு பிறகு கௌஷிக் படங்களில் நடிக்க வில்லை.
மேலும், கௌஷிக் தன் படிப்பிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் கௌஷிக் அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகி உள்ள "அடுத்த சாட்டை" என்ற படத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் 'அடுத்த சாட்டை' படத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா, சத்யராஜ், கௌஷிக், அதுல்யா ரவி, ஸ்ரீ ராம் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் "சாட்டை" என்ற தலைப்பில் வெளி வந்து உள்ளது. அப்போது இந்த படம் பெரிய அளவு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம்.
இதையும் பாருங்க : சினிமா பாணியில் குற்றவாளிகளின் கதையை முடித்த போலீஸ். பிரியங்கா ரெட்டி இழப்பிற்கு கிடைத்த நியாயம்.
தற்போது இந்த சாட்டை படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த சாட்டை என்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படத்துக்கும் வித்தியாசம் என்னவென்றால் முதலில் சாட்டை படத்தில் அரசு பள்ளியில் நடக்கும் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும், பிரச்சனையும் எடுத்துக் கூறிய படமாகும். இதற்கு அடுத்த கட்டமாக இந்த அடுத்த சாட்டை படம் கல்லூரியில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையையும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் வகையில் அமைந்து உள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் அவர்கள் இசை அமைத்து உள்ளார்.
மேலும், இந்த அடுத்த சாட்டை படத்தில் சமுத்திரக்கனி அவர்கள் தமிழ் ஆசிரியராகவும், தம்பி ராமையா கல்லுரி தலைமை ஆசிரியராகவும் நடித்து உள்ளார். ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கு நடக்கும் மோதல்களையும், பிரச்சினைகளையும், ஜாதி மத வேற்றுமைகளையும் தெளிவாக காட்டியுள்ளது இந்த அடுத்த சாட்டை படம். மேலும்,இந்த படத்தில் கௌஷிக் அவர்கள் நடிப்பு பாராட்டாக கூடிய வகையில் உள்ளது. இத்தனை வருடங்களுக்கு பிறகு சினிமா துறைக்கு வந்தாலும் கௌஷிக் நடிப்பில் மாறவில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.