போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். “என் தந்தைக்கு நான் தேசிய விருது வாங்க வேண்டும் என்பது ஆசை. அவரது ஆசையை ஒரு நாள் நிறைவேற்றுவேன். விருது வாங்கும் வாய்ப்புள்ள படம் என்றால் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார்” என்கிறார் மீரா.

சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா மிதுன். அதற்கு முன்பே ‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

இதையும் படியுங்க : 21 வயதில் திருமணம்.! பின்னர் விவாகரத்து.! அதிதி ராவ் கணவரை பார்த்திருக்கீங்களா.! 

Advertisement

8 தோட்டாக்கள் படத்தில் கொஞ்சம் நெகடிவ் சாயல் கலந்த ஒரு கேரக்டரில் நடித்த இவரைத்தேடி தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. மீரா மிதுனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அடுத்தடுத்து தேடி வந்த பல பட வாய்ப்புகள் இவருக்கு திருப்திகரமாக இல்லை.

அதனால் தற்போது செலக்டிவாக சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது.

Advertisement
Advertisement