கடந்த தீபாவளி அன்று பெரும் களேபரத்திற்கு பின்னர் வெளிவந்த படம் விஜயின் மெர்சல். படம் வெளியான பின்னும் படத்தினை பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டன. அனைத்தையும் தாண்டி மீண்டும் திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டியது மெர்சல்.
உலகம் முழுவதும் வெளியான படம் வெளியான சில நாட்களில் – 100 கோடி கிளப்பில் சேர்ந்தது. தற்போது உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்தது. இதுவே விஜய் படங்களில் அதிகம் வசூல் செய்த படமாகும்.
இன்று வரை இந்த படம் வெளியாகி 75 நாட்கள் ஆகிறது. இதனை விஜய் ரசிகர்கள் மிக ஆர்வமாக தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது வரை மெர்சல் வசூல் நிலவரம் :
உலகம் முழுவதும் – 250 கோடி
தமிழ்நாடு மட்டும் – 125 கோடி
வெளிநாடுகளில் – 75 கோடி
இதர மற்ற மாநிலங்களிலும் வசியம் செய்துள்ளது.