விஜய் படங்கள் என்றாலே திரைக்கு கொண்டு வருவதற்குள் பல போர்க்களங்களில் பல போராட்டங்களை சந்தித்து பின்னர் வெற்றிகரமாக வெளியாக சாதனை படைப்பதே தற்போதைய ட்ரெண்டாகி விட்டது. ‘நாங்க குடுத்து பழகிட்டோம், அவங்க வாங்கி பழகிட்டாங்க’ என்பது போல் கிட்டத்தட்ட காவலன் படத்திலிருந்து தடைகள் போட்டி பழகிவிட்டனர், அவரும் அதனைத் தாண்டி வந்து பழகிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.


அதே போல் தான் நாளை வெளியாகவுள்ள மெர்சல் திரைப்படத்திற்கும் பல தடைகள் வந்து விட்டது. . அதனைத் தாண்டி திரைக்கு தயாராகிவிடது மெர்சல். இவற்றையெள்ளாம் அவரது ரசியர்களுக்காகத்தான் செய்கின்றார் என்றால் அது நிதர்சனம் தான் தற்போது படத்தின் டிக்கெட் புக்கிங் வேலைகளில் மும்மூரமாக இறங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள். முதல் நாள் முதல் சோ பார்ப்பதற்க்காவே மணிக்கணக்கில் தியேட்டர் வாசளில் நிற்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

இதற்காக தியேட்டர் உன் கட் அவுட் பேனர் வைப்பது, பாலாபிசேகம் செய்வது என பல மெர்சல் வேலைகளுக்கு தயாராய் வருகின்றனர் தளபதி ரசிகர்கள். இதற்க்காக பல இடங்களில் பேனர் வைத்துள்ளனர், ஒரு சில இடங்களில் பேனர் வைத்த போது அதிகாரிகள் அவற்றை அகற்றக் கூறியுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தளபதி ரசிகர்கள் போராட்டம் செய்து மீண்டும் பேனரை உரிய இடத்தில் வைத்து கெத்து காட்டியுள்ளனர். அரசியல்வாதிகள் எல்லாம் நினைத்த இடத்தில் பேனர் வைத்துக் கொள்ளும் போது கேட்காத நீங்கள் தற்போது ஏன் கேட்கிறீர்கள் என சரியாக அதிகாரிகளை மடக்கி ஓடச் செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Advertisement
Advertisement