பாகுபலி சாதனையை வெறும் 15 நாளில் தவிடு பொடியாக்கிய மெர்சல்! என்ன தெரியுமா ?

By Ajju · 6/11/2017
இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என போற்றப்படும் படம் பாகுபலி. உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்தது சாதனை படத்துள்ளது பாகுபலி. சென்னை பாக்ஸ் ஆபீசிலும் இந்த படம் தான் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது. இந்த படத்தில் சாதனைய முறியடிப்பது மிகக்கடினமானது என்று பலர் சொன்னாலும் தற்போது மெர்சல் அந்த சாதனையை முறியடித்துள்ளது. ஆம், தற்போது வரை 210 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது மெர்சல் படம். சென்னையில் ரோகினி தியேட்டரில் இதற்கு முன்பு பாகுபலி வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளது மெர்சல். ரோகினி தியேட்டரில் மட்டும் 6 ஸ்க்ரீன் உள்ளது. இந்த தியேட்டரில் மட்டும் பாகுபலி தனது வாழ்நாளில் வைத்த மொத்த கலெக்சனையும் 15 நாளில் தவிடு பொடியாக்கியுள்ளது மெர்சல். இதையும் படிங்க: விஜய்யின் 62 கெட்டப்பை மாற்றிய முருகதாஸ்! மாறுப்பட்ட இரட்டை வேடத்தில் நடிக்க போகிறாரா விஜய்? இரண்டு படத்திலும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் பாகுபலியின் இரண்டு பாகத்திற்கும் கதை எழுதினார். அவர் தான் மெர்சல் படத்திற்கும் திரைக்கதை எழுதியிருக்கிறார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full