மெர்சல் வெளிநாட்டு வசூல் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் பிடித்த இடம்.

By Ashok · 29/10/2017
தீபாவளிக்கு வெளியாகி இன்னும் கூட்டம் கலையாமல் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அடைந்துவிட்டது மெர்சல் படம். கிட்டத்தட்ட 180 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தகவலை இந்தியா டுடே போன்ற தேசிய ஊடகங்கள் தொலைக்காட்சி விவாதத்தில் உறுதி செய்தன. இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது படத்தின் வசூல். தற்போது 10ஆவது நாள் வரை சென்னை பாக்ஸ் ஆபிசில் 9.61 கோடி வசூல் செய்துள்ளது.   மேலும், வெளிநாடுகளில் வெளியான தமிழ் படங்கங்களில் ஆல் டைம் ரெக்கார்டாக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ள வேலையில் படத்தில் உள்ள இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளதாகவும் அதனை நீக்காவிட்டால் மெர்சல் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முழுவதும் மூற்றுகையிடப்படும் என் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளர். இது தளபதி ரசிகர்களிடையே சற்று ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full