மெர்சல் படம் வெறும் 14 நாட்களில் 210 கோடி வரை வசூல் செய்து தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தற்போது தயாரிப்பாளர் தரப்பிற்கு மெர்சல் பட வசூலை என்னுவதே மிகக்கடினமாக உள்ளது போலும்.
வழக்கமாக படத்தின் சக்சஸ் மீட் அல்லது பார்ட்டியை தயாரிப்பாளர் தரப்பு தான் வைக்கும். ஆனால், மெர்சல் படத்திற்கு வித்யாசமாக தளபதி விஜய் படக்குழுவை அழைத்து சக்சஸ் பார்ட்டியை வைத்துள்ளார்.
படம் எப்படி தயாரிப்பாளருக்கு வசூலை அள்ளிக்கொடுத்ததோ, அதே போல் தளபதிக்கும் தேசிய அளவில் நற்பெயரைப் பெற்றுத்தந்துவிட்டது. அந்த குஷியில் உள்ள விஜய் சக்சஸ் மீட் வைத்ததில் எந்த சப்ரைசும் இல்லை.
இதையும் படிங்க: தீவிரவாதிகள் மூலம் விஜய்யை மிரட்டி படம் எடுத்துவிடலாம்! சூப்பர் பிளான் போட்ட இயக்குனர் ?
சக்சஸ் பார்ட்டியில் ரஹ்மான், அட்லீ, எஸ்.ஜே.சூரியா என படக்குழுவின் பலர் கலந்துகொண்டனர்.