நா.முத்துக்குமார் கடைசியாக எழுதியிருக்கும் பாடல் புதிய படத்தில் இடம்பெறும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடலாசிரியர்களில் நா.முத்துக்குமாரும் ஒருவர் ஆவார். இவர் திரைப்பட பாடலாசியர் மட்டுமில்லாமல் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்டவர். இவருடைய கவிதைகள் படிக்காத பாமரனுக்கும் புரியும் அளவிற்கு எளிமை கொண்டவை.

நா.முத்துக்குமார் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்தவர். இவர் இயற்பியல் மாணவர் ஆனார். ஆனால், இவருக்கு தமிழ் மீது உள்ள காதலால் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றார். அது மட்டும் இல்லாமல் இவர் யாப்பிலக்கணத்தை முறையாக பயின்றவர். மேலும், நா.முத்துக்குமார் அவர்களின் கவிதைகள் படிக்காத பாமரனுக்கும் புரியும் அளவிற்கு எளிமை கொண்டவை. இவர் சினிமா உலகில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் திரைத்துறைக்கு வந்தார்.

Advertisement

நா.முத்துக்குமார் குறித்த தகவல்:

பின் இவர் தன் கவிதைகளால் ரசிகர்களை கவர்ந்தார். இவர் இதுவரை சுமார் 1,500 திரைப்பட பாடல்களை எழுதி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன் போன்ற பல கவிதைகளின் தொகுப்புகளையும், நாவலையும் முத்துக்குமார் எழுதி உள்ளார். மேலும், இவர் படங்களில் பாடல் எழுதியதற்காக இரண்டு தேசிய விருதுகளை வாங்கி இருந்தார்.

நா.முத்துக்குமார் இறப்பு:

நா.முத்துக்குமார் அவர்கள் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் நா.முத்துக்குமார் கடைசியாக எழுதியிருக்கும் பாடல் புதிய படத்தில் இடம்பெறும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

படம் குறித்த தகவல்:

அதாவது திரைப்பட எழுத்தாளர் அஜயன் பாலா, உதவியாளராக பணிபுரிந்து தற்போது இயக்குனராக இருக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் கன்னிமாடம், ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகராக நடிக்கிறார். கோலிசோடா 2 கிரிஷா குரூப், யோகி பாபு, முனிஷ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை அஜய் அர்ஜுன் ப்ரொடக்ஷன் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.

Advertisement

நா. முத்துக்குமாரின் கடைசி பாடல்:

மேலும் இந்த படத்தில் தான் நா.முத்துக்குமாரின் கடைசி பாடல் இடம்பெற இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் அஜய் பாலன் கூறி இருப்பது சூழலியல் பின்னணியில் இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த பின்னணியில் தமிழில் உருவாகும் முதல் படம் இதுதான். நான் ஏற்கனவே உருவாக்கி இருந்த படத்துக்காக நா.முத்துக்குமார் ஒரு பாடல் எழுதிக் கொடுத்திருந்தார் அந்த பாடலை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். அந்த பாடல் இந்த படத்தின் கதைக்கு பொருந்துவதால் இந்த படத்தில் அந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறேன். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement