கஜா புயல் பாதிப்பு..!நடிகர் சங்கம் செய்த சிறப்பான உதவி..!

By Rajkumar · 5/12/2018
தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளையும் உடமைகளையும் இழுந்து தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதுபோக திறைத்துரையை சேர்ந்த பல்வேறு கலைஞ்சர்களும் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளுதவியையும் செய்து வரும் நிலையில் விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என பலரும் உதவி செய்தனர். இந்நிலையில் கஜா புயல் பாதிப்பிற்கு தமிழ் சினிமா நடிகர் சங்கமும் தனது உதவி கரத்தை நீட்டியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது 8.6 லட்சத்திற்கான நிதியுதவியை அளிக்கஉள்ளது. அந்த உதவியை கஜா புயலால் பாதிக்கப்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவியாக அளிக்க திட்டமீட்டுள்ளனர். சங்கத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்காக உதவி செய்ய அனைவரும் தலா 5000 ரூபாயை அளித்துள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் நிதி உதவி பெறப்பட்டு புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய புகுதிகளில் கஜா புயலால் பதிக்கப்பட்ட சங்க உரிப்பி னர்களுக்கு 5000 ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full