பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை உடன் நாக சைதன்யா டேட்டிங் செய்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

Advertisement

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் இருவரும் வெளிநாடு சுற்றுவது, புகைப்படம், வீடியோ என்று காதல் புறாக்களாக இருந்தார்கள். இதனால் இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்து இருந்தார்கள்.

சமந்தா-நாக சைதன்யா திரைப்பயணம்:

மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இவர்கள் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement

நாக சைதன்யா டேட்டிங் செய்யும் நடிகை:

இப்படி ஒரு நிலையில் சமீப காலமாகவே நாக சைதன்யாவுக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் நாக சைத்தன்யா நடிகை ஒருவரை டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாக சைத்தன்யா அவர்கள் ஜூப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் புதிய பங்களா ஒன்றை கட்டி இருக்கிறார். இந்த பங்களாவுக்கு பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவை அடிக்கடி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Advertisement

பொன்னியின் செல்வன் படம்:

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இந்த படத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் நடிகை ஷோபிதா துலிபாலா அவர்கள் வானதி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement