பொதுவாகவே நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்கள். அதில் அவர்கள் தான் அடிக்கடி நடத்தும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள் என அனைத்தையும் பதிவிடுவது வழக்கம். இதை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல், விமர்சனம் செய்வது வழக்கமான ஒன்று தான். அதில் ரசிகர்கள் நடிகைகளின் புகைப்படங்களை வைரல் ஆக்குவார்கள். அந்த புகைப்படங்களில் ஏதாவது குறை இருந்தால் ட்ரோல், மீம்ஸ் போட்டு விமர்சிப்பார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நந்திதா ஸ்வேதா புகைப்படத்தை ரசிகர்கள் விமர்சித்து கிண்டல் செய்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற டயலாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டாகாத்தி என்ற படத்தில் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த படத்திற்க்கு பிறகு இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர் நீச்சல் என்ற படத்தில் ஒரு முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நந்திதா.

Advertisement

நந்திதா ஸ்வேதா திரை பயணம்:

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படம் மூலம் தான். இந்த படத்திற்கு பின்னர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நந்திதா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடித்து வருகிறார். கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கிறார் நந்திதா ஸ்வேதா.

நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம்:

அதிலும் அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நந்திதா ஸ்வேதா எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது வழக்கம். அதே போல இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா அவர்கள் சோசியல் மீடியாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Advertisement

நந்திதா ஸ்வேதா புகைப்படத்தை விமர்சித்த நெட்டிசன்கள்:

அதில் அவர் பார்ப்பதற்கு குண்டாக இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து விமர்சித்து பதிவு போட்டு இருக்கிறார்கள். அதில் சிலரும் நந்திதாவை ஒர்க் அவுட் செய்து உடலை சேப்பில் வைத்துக்கொள்ளும்படி எல்லாம் அட்வைஸ் செய்து மெசேஜ் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இதையெல்லாம் பார்த்த நந்திதா அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

Advertisement

இன்ஸ்டாவில் பதில் கொடுத்த நந்திதா ஸ்வேதா:

அதில் அவர் கூறியிருப்பது, நான் ஒன்றும் கடவுள் இல்லை. நானும் மனுஷி தான்.. நானும் சில விஷயங்களை கடந்து வருகிறேன். எப்படி மக்கள் இதுபோல எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. என் உடலை நான் நேசிக்கிறேன், மேலும் நான் எப்படி இருக்கிறேன் என்பதையும் வாழ்வின் இந்த தருணத்தையும் நேசிக்கிறேன் என்றெல்லாம் கூறி இருக்கிறார். இப்படி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement