சக நரிக்குறவர் பெண்ணை கத்தியால் தாக்கியதாக இணையத்தில் பிரபலமான நரிக்குறப்பின் அஸ்வினி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி வழக்கில் தற்போது அஸ்வினையை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார். முயற்சி வழக்கில் மாமல்லபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நரிக்குறவ பெண் அஷ்வினி மீது ஏற்கனவே அங்குள்ள கடை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் இப்பெண் எங்களை தொழில் செய்ய விட வில்லை என்றும் எதிர்த்து கேள்வி கேட்டால் முதல்வர் பெயரை கூறி மிரட்டுவதவும் புகார் அளித்துள்ளனர்.
இவர் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் நரிக்குறவர் பென் அஸ்வினி. இவருக்கு சில மாதங்களுக்கு முன் கோவிலில் அன்னதானம் சென்றுள்ளார் அப்போது அங்கு உள்ள நபர்களால் இவர் விரட்டி அடிக்கப்பட்டார் அதனை அவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். அந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.அதன் பின் அவருக்கு அந்த கோவிலில் அமைச்சர் உடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
பின் முதல்வர் அவர்கள் நரிக்குறவர் அஸ்வினி வீட்டிற்கு சென்று உணவு அருந்திவிட்டு அங்குள்ள நரிக்குறவ மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கினார். இதன் மூலம் பெண்மணி பகுதியில் மிகவும் பிரபலமானார். அதன் பின் இவரது செய்யகளால் அங்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான் யார் தெரியுமா எங்க விட்டுக்கு முதலமைச்சரே வந்து போய் இருக்காரு என அங்குள்ள தொழிலாளர்களை மிரட்டி வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் மீது பெரிய சர்ச்சைகளை கிளம்பியது. இவர் முதல்வர் மற்றும் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி இவரது தொழில் செய்து வந்துள்ளார்.
இன்று சக நரிக்குறவ பெண் நதியா என்பவர் தனது கடற்கரை சாலையில் தொழிலாளர் பாசி மாலையை விட்டு வந்துள்ளார். இதனைப் பார்த்த பிரபலமான நரிக்குறவ பெண் அஸ்வினி வேறு ஊரில் வந்து எப்படி இங்கு தொழில் செய்யலாம் என்று அவரை மிஎச்சரித்து அனுப்பயுள்ளனர். மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை தாக்கியுள்ளார் அஸ்வினி. இதில் சக நரிக்குறவர் பெண்ணான நதியாவிற்கு கழுத்து முதுகு உட்பட பல பகுதிகளில் பலத்துக் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் நரிக்குறவர் பெண் நதியா. மறு முயற்சி வழக்கில் அஸ்வினையை கைது செய்தது மாமல்லபுரம் போலீசார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு சக வியாபாரியை தாக்கியதாக நரிக்குறவர் பெண் அஸ்வினி மீது புகார் அளிக்கப்பட்டது இதனை எடுத்து காவல்துறையினர் இவரை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிகழ்வானது மாமல்லபுரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.