காதல் தோல்விக்கு பின் நயன்தாரா அளித்த முதல் பேட்டி - தற்போது வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 25/11/2020

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே அதேபோல நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன்னதாக சிம்புவையும் பிரபுதேவாவை காதலித்து வந்தார் ஆனால் அவர்கள் இருவருடனும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த இரண்டு காரணமே தோல்வி அடைந்தது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஆனால் சிம்பு மற்றும் பிரபுதேவாவை நயன்தாரா விக்னேஷ் சிவனின் காதல் ஜோடிகள் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அதற்கு முக்கிய காரணமே நயன்தாராவின் கடந்த இரண்டு காதலை விட தற்போது விக்னேஷ் சிவன் உடனான காதல் தான் அதிக ஆண்டுகள் நீடித்து வருகிறது இந்த காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நாங்கள் இருவரும் காதலித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் இருவருமே இதுவரை திருமணம் குறித்து கொஞ்சம் கூட தகவலை வெளியிடாமல் தான் மௌனம் சாதித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய நயன்தாரா. தனது முன்னாள்அதில், 'நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல் என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்'' என கூறி இருந்தார். இது ஒருபுறம் இருக்க பிரபு தேவாவின் முன்னாள் மனைவியான ராம்லதா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் நயன்தாரா குறித்து பேசி இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நயன்தாராவை எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும், அவளை சந்திக்க நேர்ந்தாலும் அப்படியே ஓங்கி ஒன்னு பலார்ன்னு கன்னத்தில் அரையலாம் என்று தோன்றுகிறது.

https://www.youtube.com/watch?v=8M03D5nvcbY

நயன்தாராவால் தான் என்னுடைய பதினைந்து வருட சந்தோஷமான திருமண வாழ்க்கை முடிவடைந்தது. நான் நயன்தாராவை என்றென்றும் மன்னிக்க மாட்டேன்.இந்த மாதிரி பெண்களெல்லாம் கைது செய்ய சொல்ல வேண்டும் என்று கோபத்துடன் கூறினார். பிரபு தேவாவுடன் பிரேக்கப்பிற்கு பின்னர் நயன்தாரா ஒரு வருடம் படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபு தேவாவுடன் பிரேக்கப்பிற்கு பின்னர் நயன்தாரா அளித்த பேட்டியின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full