நான் இனி இப்படி நடிக்க மாட்டேன் ! '2' அதிரடி கண்டிஷன் போட்ட நயன்தாரா !

By Ajju · 15/1/2018
தமிழ் சினிமாவில் நெம்பர் ஒன் நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தனித்த ஒரு ஹீரோயினாக சாதித்து வருகிறார். ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு டூயட் பாடும் ஹீரோயினாக இருந்தவர், தற்போது சோலோவாக அசத்த ஆரம்பித்துவிட்டார். அவர் சோலோவாக நடித்த அறம் படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து அவருடைய மார்கெட்டும் எகிறியது. இதனால் ஹீரோக்களுடன் நடிக்க தற்போது கண்டிஷன் போட துவங்கி உள்ளார். ஹீரோக்களுடன் நடித்தால் மிக நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனவும், விவகாரமாக ட்ரெஸ் போட்டு நடிக்க மாட்டேன் எனவும் கண்டிஷன் போட்டுள்ளார் நயன்தாரா. தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்னா உடன் நடித்து வருகிறார். இதிலும் கூட இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் கேட்டுக்கொண்டதால் தான் நடித்து கொடுத்தாராம்
Tamil Behind Talkies AMP · Quick view
View full