சிவாகார்த்திகேயன்-நயன்தாரா நடிக்கும் வேலைகாரன் பட சூட்டிங் தற்போது ராஜாஸ்தானில் நடந்து வருகிறது. இந்த படத்தில் பாடல் காட்சிகள் ராஜாஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் சூட் செய்யப்பட்டது. படத்தின் நேற்றைய செட்யூல் முடிந்ததும் நயன்தாரா அங்கு பக்கத்தில் உள்ள அஜ்மீர் தர்காவிற்கு சென்று வர அடம் பிடித்துள்ளார்.

பின்னர் படக்குழுவுடன் சேர்ந்து அஜ்மீர் தர்காவிற்கு சென்றார் நயன்தாரா. அங்கு நடைபெற்ற தொலுகையில் கலந்துகொணடு பிராத்தனை செய்துள்ளார். மேலும், கண்ணீர் விட்டு அழுது பிராத்தனை செய்துள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், நயன்தாரா அழுததைப் பார்த்த படக்குழு சோகத்துடன் இருந்துள்ளது.

ராஜஸ்தானில் சூட்டிங் எடுக்கும் கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் இங்கு புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு வருவது வழக்கமான ஒன்றுதான். மேலும், இங்கு பிராத்தனை செய்யும் பிரபலங்கள் பலர் அழுதுவிடுவதும் வாடிக்கை தான் என நிம்மதியுடன் உள்ளது படக்குழு.

நயன்தாரா, சிவாகார்த்திகேயன் மற்றும் படக்குழு தொழுகை செய்த போது எடுத்த படங்கள் :

Advertisement
Advertisement