பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சொந்தக் குரலிலேயே படங்களுக்கு டப்பிங் செய்து விடுவார்கள். ஆனால் ஒரு சில ஹீரோயின்கள் மட்டுமே தங்களது சொந்த குரலில் டப்பிங் செய்வார்கள். இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான நடிகைகள் வேறு மாநிலத்தில் இருந்து வந்த நடிகைகளாகவே இருப்பதால் அவர்களின் மொழி உச்சரிப்பு அவ்வளவு நன்றாக இருப்பதில்லை.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு அதிகப்படியான படங்களில் டப்பிங் செய்துள்ளார் தீபா வெங்கட்.இயக்குனர் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவிற்க்கு முதன் முதலில் டப்பிங் கொடுத்துள்ளார் தீபா. மேலும் இவரின் டப்பிங் நயன்தாராவிற்கு பிடித்து போக இவருக்கு தனி ஒருவன் படத்திற்கும் டப் செய்ய அழைப்பு வந்ததாக தெரிவித்திருந்தார்.

Advertisement

மேலும் இதுவரை நயன்தாரா நடித்த பெரும்பாளான படங்களில் இவர் தான் நயன்தாராவின் குரலுக்கு சொந்தக்காரியாக இருந்துள்ளார்.ராஜா ராணி,தனி ஒருவன், மாயா’இது நம்ம ஆளு, காஸ்மோரா, அறம், வேலைக்காரன் போன்ற பல படங்களில் டப் செய்துள்ளார். நயனுக்கு மட்டுமல்ல ஜோதிகாவிற்கும் இவர் டப்பிங் பேசியுள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தீபா பல ஸ்வாரசியான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில், ஜோதிகாவும், நயன்தாராவும் டப்பிங் முடிஞ்சதுமே எப்படி வந்திருக்கு, தப்பு எதுவும் இருக்கான்னு பூதக்கண்ணாடி வெச்சு தேடித்தேடிப் பார்க்கக் கூடியவங்க. அதனால, ஜோதிகா, நயன்தாரா அனுஷ்காலாம் ஸ்பெஷல் எனக்கு. அவங்க எனக்கு கால் பண்ணி, சின்ன கரெக்‌ஷன்ஸ் சொல்றது, நல்லா பண்ணினதைப் பாராட்டுறதுன்னு வேலைல அவ்வளவு டெடிகேட்டடா இருப்பாங்க என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement