திடீரென்று அடுத்தடுத்து இரண்டு படங்களிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நீக்கி இருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

Advertisement

இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இது பலருக்கும் சந்தோசத்தை கொடுத்து இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருந்தார்கள்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தைகள்:

இதுபற்றி நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து இருந்தார்கள். மேலும், விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அதோடு குழந்தை பிறந்த பிறகு நயன்தாரா அவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக சில மாதங்களாக சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டிருந்தார். பின் மீண்டும் இவர் தன்னுடைய சினிமா பணியை தொடங்கி விட்டார்.

Advertisement

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

தற்போது நயன்தாரா அவர்கள் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்ற படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படி சினிமா உலகில் பிஸியாக வலம் வரும் நயன்தாராவை அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை நயன்தாரா அவர்கள் 2021 ஆம் ஆண்டு முன்னணி தயாரிப்பாளர் ஒருவரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கும் இரண்டு படங்களில் கமிட் ஆகி இருந்தார்.

Advertisement

படத்தில் இருந்து நீங்கிய நயன்தாரா:

இதற்காக இவருக்கு ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் விதம் 20 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த படத்திற்காக நயன்தாரா அவர்கள் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார். இதனால் கடுப்பான அந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் நயன்தாரா நடிக்க இருந்த அந்த இரண்டு படத்திற்கான ஒப்பந்தத்தை கேன்சல் செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவருக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையையும் திருப்பி வாங்கி இருக்கிறார்.

பெரியப்பா விட்ட சாபம் :

ஏற்கனவே விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து இயக்க இருந்த ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் நயன்தாரா அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் நடைபெற்ற போது விக்னேஷ் சிவன், அவரது பெரியப்பாவை அழைக்கவில்லை. அப்போது பேட்டியில் பேசிய அவர் ‘, இவன் தாலி கட்டுயது 10.25 சரியான குளிகை நேரம் இந்த நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும் அது மீண்டும் ரிப்பீட் ஆகும்’’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement