தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் “மாயா” என்ற திகில் சரவணன் வெளியாகி சரவணன் அளவில் ஹிட் அடித்திருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கைகோர்த்துள்ளார் நடிகை நயன்தாரா. இயக்குனர் அஸ்வின் ஏற்கனவே மாயா, கேம் ஓராவர் போன்ற திகில் திரைப்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளது.

இப்படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவத்தின் ரவுடி தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் பிருத்வி சந்திரசேகர் இசையமைத்து, மணிகண்டன் கிருஷ்ணமாச்சரியர் ஒளிப்பதிவாளராகவும், ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் கிருஷ்ணமாச்சரியர் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயன்தாரா நடித்த “கனெக்ட்” திரைப்படம் வெளியாகியிருந்தது.

Advertisement

இந்த படத்திற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு வைத்த நிலையில் படம் வெளியானதும் கடுமையான விமர்சங்களை பெற்றது. மேலும் ரசிகர்களை தூண்டி விடுமாறு இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில கருத்துக்களை கூறி ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா ஒரு அறிக்கையை வெளியிட்டுளார்.

அந்த அறிக்கையில் `இது என்னுடைய ஒரு நிகழ்வு நிறைந்த ஆண்டு அதற்கு நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். எங்கள் “இணைப்பை” பார்த்து ஆதரவளித்த அனைத்து திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து படம் வெளியான பின்னும் படத்தை ரசிப்பவர்களுக்கு மிக்க நன்றி. இது ஒரு வகையான திரைப்படம். இப்படத்தில் நாங்கள் எங்ககளால் முடிந்த கொடுக்க முயற்சித்துளோம்.

Advertisement

எனவே இந்த நோக்கை மனதில் கொண்டு எங்கள் முழு குழுவும் மிகுந்த நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் பணியாற்றினோம். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் என்னுடன் இருந்த என் இயக்குநரான அஷ்வின் சரவணன் மற்றும் அவரது குழுவை நம்பியதற்கு நன்றி. உங்கள் திரைப்படம் உலகத் தரம் வாய்ந்தது அதனை எப்போதும் நான் ஒத்துழைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது தயாரிப்பாளரான விக்னேஷ் சிவனுக்கும், ரவுடி ப்ரொடெக்ஷன் நிறுவனத்திற்கும் எனது நன்றியும் அன்பும்.

Advertisement

இந்தத் திரைப்படமும், குழுவும், பார்வையாளர்க்ளும் நாங்கள் நினைத்தை விட அதிகமாக ஆதரவு கொடுத்தீர்கள். எங்களின் படத்தை சிறந்த முறையில் தயாரித்து விநியோகித்ததற்கு மீண்டும் ஒருமுறை நன்றி. உங்கள் அன்பு, ஆதரவு, கருத்து மற்றும் விமர்சனங்கள் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு இதை ஒரு பாடமாக பயன்படுத்துவோம்.

மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் உங்கள் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி மற்றும் உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்படிக்கு நயன்தாரா என்று தன்னுடைய அறிக்கையில் பகக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன். புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் நடிகை நயன்தாரா.

Advertisement