தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.இவரது கால் ஷீட் கிடைக்காத என்று பல்வேறு இயக்குனர்களும் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர் .அதே வரிசையில் நின்றவர் தான் பிரபல நடிகை கௌதமியும்.

ஒரு காலத்தில் ரஜினி,கமல்,விஜகாந்த் என்று அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார் நடிகை கௌதமி. அதன் பின்னர் கமலுடன் வாழ்ந்து வந்த கௌதமி கடந்த ஆண்டு அவரிடம் இருந்து பிரிந்து விட்டார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார்.

Advertisement

மார்கெட் முடிந்த நடிகர்கள் ஆகட்டும் நடிகைகள் ஆகட்டும் 
எல்லோருக்கும  இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வேண்டுமென ஆசைப்படுவது இயல்பு. அந்த ஆசை தற்போது கௌதமிகும் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் நடிகை கௌதமி ,நயன்தாராவை வைத்து படம் எடுக்கலாம் என்று அவரிடம் கதை கூறியுள்ளார்.அந்த கதையை கேட்டு நயன்தாராவும்,விக்னேஷ் சிவனும் ஓகே சொல்லி இருக்கின்றனர்.

ஆனால் நடிகை நயன் என்னுடைய கால் ஷீட்  முடிவை ஹைதராபாத்தை சேர்ந்த ராணா என்ற ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளதாக கூறியுள்ளார்.
அதை நம்பி அந்த நிறுவனத்தை அணுகி கதையை கூறியுள்ளார் கௌதமி. ஆனால், 
கதையை கேட்டதும் உடனடியாக எங்களுக்கு இந்த கதை பிடிக்கவில்லை என்றும் இதனை எடுக்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் நடிகை நயன்தாராவிற்கும் கௌதமி சொன்ன கதை பிடிக்கவில்லை ஆனால், அதை எப்படி அவரிடம் நேரில் சொல்வது என்று தெரியாமல் கௌதமியை வேண்டுமென்றே அலைகழைத்துள்ளார். இதனால் நடிகை கௌதமி நயன்தாரா மீது மிகுந்த அப்சட்டில் இருந்து வருகிறாராம். 

Advertisement
Advertisement