அந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்.! பொன்னணியின் செல்வன் வாய்ப்பை நிராகரிக்கும் நயன்.!

By Rajkumar · 31/5/2019

வித்யாசமான கதைகளை எடுப்பதில் வல்லவரான இயக்குனர் மணிரத்னம் வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை  திரைப்படமாக எடுக்க உள்ளார். இந்த படத்தினை ரிலைசன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும்ம், இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான குந்தவை, நந்திதி, ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன், உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியானது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற 'கேன்ஸ்' திரைப்பட விழாவில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யாராய் உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா மருத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதால் இப்படவாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் இது குறித்து எந்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full