இன்ஸ்டா வந்ததும் ஒரே ரொமான்ஸ் தான் - விக்னேஷ் ஷிவனுடன் செய்த சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த நயன்தாரா

By Arun · 4/9/2023

உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருந்த கனக்ட் திரைப்படம் சுமாரான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் , ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள்.

தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் தங்கள் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆனால், இதுநாள் வரை தங்கள் உயிர் உலகத்தின் முகத்தை காட்டாமல் இருந்து வருகின்றனர். சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது இரண்டு மகன்களின் புகைப்படத்தை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

அதிலும் குழந்தைகளின் முகத்தை காட்டவில்லை. நயன்தாரா இன்ஸ்டாகிராம் வலைத்தளத்திலும் இல்லை என்பதால் விக்னேஷ் சிவன் தான் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் நயன்தாரா இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி இருக்கிறார். அதில் முதல் பதிவாக தனது இரண்டு மகன்களான உயிர் உலக்கை கையில் ஏந்தி நடந்து வரும்படியான வீடியோ ஒன்றை வெளியிட்டு 'நான் வந்துட்டேன்னு சொல்லு' என்று கேப்ஷனையும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் தனது உ=இன்ஸ்டாகிராம் ஸ்டோரியல் விக்னேஷ் சிவனுடன் சாட்டிங் செய்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full