தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும் ,நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு செல்வதே இல்லை.

இத்தனை பிசியிலும் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஊர் சுற்றுவதை மட்டும் தவறுவதே இல்லை. அடிக்கடி வெளிநாட்டிற்கு பறந்து செல்லும் இந்த ஜோடிகள் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர். சமீபத்தில் சென்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம், நியூ இயர் கொண்டாட்டம், நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று அனைத்தையும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடினார்.

Advertisement

ஆனால், இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். இதுகுறித்து பிரபல செய்தி வலைதளத்தில் வெளியான தகவலின்படி, நயன்தாரா தனது சினிமா வாழ்வில் அடையப்போகும் உச்சத்தை ஜோதிடர் ஒருவர் கணித்து கூற அது அப்படியே நடந்து விட்டதால், அந்த ஜோதிடரை நடிகை நயன்தாரா பெரிதும் நம்புகிறாராம், அவர் சொன்னதால் தான் கடந்த ஆண்டிலிருந்தே நயன்தாரா விக்கியை ஜோடிகள் அடிக்கடி கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்களாம். மேலும் அந்த ஜோதிடர் நயன்தாராவிற்கு திருமண தோஷம் இருப்பதாக சொல்லி அவரை காளஹஸ்தி சென்று வழிபட சொல்லியிருக்கிறார்.

அதனால்தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காளஹஸ்தி பகவதி அம்மன் கோயில் திருச்செந்தூர் கோயில் என்று சென்றுள்ளார்கள். மேலும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபட சொல்லி இருக்கிறார் அந்த ஜோதிடர். ராகு பகவான் மணக்கோலத்தில் சிவனை வேண்டி பிரார்த்திக்கும் இந்த கோவிலுக்கு சென்று வந்ததும் நயன்தாராவின் திருமணத்தடை முற்றிலும் விலகிவிடும் என்று அந்த ஜோதிடர் சொல்லியிருக்கிறார். அவரின் அறிவுரையின்படி இருவரும் அந்த கோவிலுக்குள் செல்வதற்கு லாக்டவுன் அறிவித்துவிட்டார்கள். எனவே லாக் டவுன் முடிந்ததும் அந்த கோவிலுக்கு சென்று ராகு பகவானை தரிசித்து விட்டு வந்த உடன் கூடிய விரைவில் நயன்தாராவின் திருமணம் நடைபெறும் என்றும் கூறுகிறார்கள்.

Advertisement
Advertisement