பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கரண் ஜோஹர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தங்கள் மனம் திறந்த பதில்களை அளிப்பதால் இதனை ரசிகர்கள் பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். சமீபத்தில் இதன் 7வது சீசன் தொடங்கியது. இதில் ஆலியா பட் – ரன்பீர், சாரா அலி கான், ஜான்வி கபூர் ஆகியோர் பங்கேற்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சர்ச்சையாகும் அளவிற்கு பதிலளித்தனர்

நயன்தார தான் தென்ந்தியாவின் முன்னனி நடிகை :-

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்து தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் நயன்தாராவை பெரிய நடிகை இல்லை என்று இழிவுபடுத்தி விட்டதாக பிரபல இந்தி டைரக்டர் கரண் ஜோகருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது சமந்தாவிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோகர், தென்னிந்திய திரைப்படத் துறையில் யார் பிரபலமான நடிகை என்ற கேள்வியை முன்வைத்தார்.

Advertisement

இதையும் பாருங்க : திரிஷாவின் வீடியோவை பார்த்துவிட்டு வேண்டாம் என்று சொல்லியுள்ள சங்கர் – அவர் சொன்ன காரணம். உதவி இயக்குனர் சொன்ன விஷயம்.

அதற்கு சமந்தா, சற்றும் யோசிக்காமல் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை குறிப்பிட்டு நான் நயன்தாராவுடன் ஒரு படம் செய்தேன். தென்னிந்தியாவில் அவர் தான் மிகப்பெரிய நடிகை என தான் நினைப்பதாக கூறினார். அதற்கு கரண் ஜோகர், அவர் என் லிஸ்டில் இல்லை என கூறினார். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் அவருடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்த போது சூப்பராக இருந்தது.

Advertisement

சமந்தா நயன்தாரவின் நட்பு :-

என்னுடைய எல்லா நேர்காணல்களிலும் நயனுடன் இணைந்து நடித்தது பற்றி கேட்கிறார்கள். அதை உண்மையிலேயே அற்புதமான தருணமாக உணர்கிறேன். ஷூட்டிங்கின் கடைசி நாளில் கூட நாங்கள் இருவரும் கட்டியணைத்து அழுதோம் அந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனோம் என சமந்தா தெரிவித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சம அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தாவே எந்தவித ஈகோவும் இல்லாமல் நயன்தாராவைப் பற்றி பெருமையாக தெரிவிக்கிறார்.

Advertisement

இதே நிகழ்ச்சியில் தான் அஜய் குமார் சமந்தா நடனம் அரங்கேறியது :-

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் தான் புஷ்பா.அந்த படத்தில் வரும் ஓ சொல்லுறியா !! ஓகோ சொல்லுறியா மாமா !! பாடலும் அதில் இடம் பெற்றுள்ள சமந்தாவின் நடனமும் அனைவரது பிடித்தமான ஒன்று. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா அக்‌ஷய் குமார் இதே பாடலுக்கு நடனமாடினார். அப்போது சமந்தாவை அக்‌ஷய் குமார் அலேக்காக தூக்கி ஒரு சுற்று சுற்றினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், திருமண முறிவு என்பதால் முடங்காமல் தொடர்ந்து உற்சாகமாக இருக்கும் சமந்தாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.

நயன் ரசிகர்கள் கொந்தளிப்பு :-

கரண் ஜோகர் யார் என்றும் இந்தியில் தயாரான குட்லக் ஜெர்ரி படம் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் என்பது உங்களுக்கு தெரியுமா என்றும், நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா போன்ற திறமையான நடிகைகள் தென் இந்தியாவில் உள்ளனர் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தென் இந்திய திரையுலகம் மீது கரண் ஜோகருக்கு எப்போதுமே பொறாமை என்றும் பலர் கண்டித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இவரின் சர்ச்சை கருத்து தற்போது பரபரப்பாகி உள்ளது.

Advertisement