தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். நயன் அவர்கள் , ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று இருந்தார்கள்.அதன் பின் இருவரும் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதுபற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார்கள்.

Advertisement

இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்.இது குறித்து கடந்த மாதம் முழுவதும் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. அதற்குப் பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் உரிய ஆதாரங்களை மருத்துவரிடம் சமர்ப்பித்து இருந்தார்கள்.

குழந்தை பிறந்ததிலிருந்தே தங்களுடைய குழந்தைகளின் முகத்தை வெளியில் காட்டாமல் வைத்து வருகிறார்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் மும்பை விமான நிலையத்தில் தங்கள் இரு குழந்தைகளுடன் வந்திருந்தார்கள் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பதிலாக பரவி வருகிறது. விக்னேஷ் சிவன் இறுதியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி இருந்தார். இதனை தொடர்ந்து அஜித்தை வைத்து இவர் படம் இயக்குவதாக அறிவிப்புகள் வெளியானது.

Advertisement

இப்படத்தின் கதை அஜித்திற்கும், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவம் AK62வில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. தற்போது Ak62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்க இருக்கிறார். AK62வில் இருந்து விக்னேஷ் சிவம் நீக்கப்பட்டதற்காக காரணம் நயன்தாரா என்று கூறப்படுகிறது.அதாவது AK62 படத்தின் இயக்குனராக இருந்த விக்னேஷ் சிவம் படத்தின் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க முடிவு செய்துள்ளார்.

Advertisement

ஆனால் நயன்தாராவிற்கு பதிலாக நடிகை திரிஷாவை லைகா நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் அதனை விக்னேஷ் சிவம் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து இசசரியா ராய், காஜல் அகர்வால் என தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளை பரிந்துரை செய்தும் இயக்குனர் விக்னேஷ் சிவம் தன்னுடைய மனைவி நயன்தாராவை கதாநாயகியாக அடம்பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் இறுதியாக பிரபல பாலிவுட் நடிகையை தேர்ந்தெடுத்து சம்பளம் விவகாரம் வரையில் சென்ற பிறகு விக்னேஷ் சிவம் அந்த நடிகையும் வேண்டாம் என்று சொல்ல AK62 தயாரிப்பு நிறுவனம் மற்றும் அஜித் கடுப்பாகி விக்னேஷ் சிவமை படத்தில் இருந்து நீக்கியதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்த தகவல் வைரலாக நிலையில் ஏற்கனனே விக்னேஷ் சிவமை கலாய்த்த நெட்டிசன்கள் தற்போது பலவிதமான மீம்ஸுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Advertisement