விஜய்யின் அடுத்த படத்தை இவர் தயாரிப்பதால் யாரும் வாலாட்ட முடியாது!

By Ajju · 21/10/2017
விஜயை வைத்து படம் எடுத்தால் எப்படியும் ரிலீசில் அரசியல் சிக்கல் வரும் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு எதாற்த்தமான விசயம். இருந்தும் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையில் நிற்க்கத்தான் செய்கின்றன. தற்போது மெர்சலை தயாரித்து வசூல் மழையில் நனைந்து கொண்டிருக்கும் தேனான்டாள் பிலிம்ஸ் இருந்தாலு, இந்த நிமிடம் வரை பிரச்சனைகளை சந்திதுக் கொண்டிருக்கும் நிலை தான் இருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் விஜயின் அடுத்த படம் இவருடைய ஆஸ்தான இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகவுள்ளது. அட்லி இயக்கத்தில் வந்த முதல் சமூக நீதி படத்திற்கே இவ்வளவு எதிர்ப்பு என்றால். 'காலங்காலமாக சமூக விழிப்புணர்வு படத்தை எடுத்து வரும் முருகதாஸ் இயக்கம் என்றால் நினைத்துப் பாருங்கள்? எவ்வளவு செறிவுடன் படம் இருக்கும் என!!' ஆனால், இந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி கதையை தயாரிகப்போவது பெருமுதலை 'சன் பிக்சர்ஸ்'. இது இந்தியாவின் பெருந்தலைவர்களில் ஒருவரான முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் குடும்ப நிறுவனமான சன் நெட்வொர்க்கை சார்ந்தது. இந்த தயாரிப்பு நிருவனத்தின் முதன்மை செயலாலர் கலாநிதி மாறன் மறைந்த அரசியல் தலைவர் முரசொலி மாறனின் மகனாவார். மேலும் , கலாநிதி மாறன் இந்திய தொழில் முதலைகளில் ஒருவர். அவருடைய அரசியல் பின்புலம் மத்திய பங்கு வர்த்தகத்தைக் கூட ஆட்டிப் படைக்கக் கூடியது. தற்போது விஜயின் அடுத்த படத்தை சன் நெட்வொர்ட் தயாரிப்பதால், மெர்சல் படத்திற்கு வரும் சர்ச்சை மற்றும் பிரச்சனைகளை சன் நெட்வொர்க் மிக எளிதாக கையாளும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தளபதி விஜயும் உற்சாகமாக மீண்டும் இன்னொரு சமூக நீதி படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full