கடந்த இரண்டு நாட்களாக சீரியல் நடிகை நிலானி என்பவரால் உதவி இயக்குனராக இருந்த காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 வருடங்களாக பழகி வந்த நிலானி, தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் காந்தி லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

காந்தி லலித்குமார் தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் மீது போலீசில் புகார் அளித்திருந்த நிலானி, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தகராறு செய்து மிரட்டுகிறார் என்று புகார் அளித்திருந்தார். ஆனால், காந்தி லலித்குமாரின் தற்கொலைக்கு பின்னரே நிலானிக்கும், காந்தி லலித்குமாருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்று சமீபத்தில் வெளியான சில புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது.

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிலானி, லலித் குமாருடன் நான் பழகியது உண்மை தான், ஆனால் அவர் கேட்டவர் என்று தெரிந்ததும் அவரிடம் இருந்து நான் விலகி கொண்டேன். ஆனால் அவர் என்னை விடாமல் மிரட்டிக்கொண்டே இருந்தார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நிலானியை, லலித் குமார் போன் செய்து மிரட்டிய செல் போன் உரையாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த ஆடியோ பதிவு.

Advertisement
Advertisement