மெர்சல் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 200 கோடிக்கு மேல் உலகம் முழுவது வசூல் செய்து சாதனை மேல் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.

மெர்சல் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகிய மூன்று பேர் மூன்று விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தனர். மற்ற இருவருக்கும் அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை எனினும் 80களில் வரும் நித்யா மேனனின் கதாபாத்திரம் பலத்த கைதட்டலுடன் மக்களின் மனதில் பதியும் வண்ணம் இருந்தது.

இதையும் படிங்க:
மெர்சல் 2 படத்தில் ஒப்பந்தம்- தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தந்த மெர்சல் அதிர்ச்சி !

நித்யா மேனன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அதில் விஜய் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது,
விஜய் படப்பிடிப்பு தளத்தில் யாரையும் தொந்தரவு செய்யமாட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பார். மிகவும் அமைதியாக தன் வேலைகளை செய்துகொண்டிருப்பார்.
எனக் கூறினார் நித்யா மேனன்.

Advertisement
Advertisement