எந்த ஒரு தாய்- தந்தைக்கும் இதுபோன்ற ஒரு நிலைமை வரக்கூடாது என்று தனது குழந்தைக்கு நேர்ந்த சோகத்தை சொல்லி கண்ணீர் விட்ட சச்சின் பட நடிகை பிபாஷா பாசு. இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், தெலுங்கு, பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் இவர் இரண்டாவது நடிகையாக நடித்துள்ளார். இவர் தனது குழந்தையின் உடல் நிலை கூறித்து எந்த ஒரு குழந்தைக்கும் இப்படி பட்ட நிலை வரக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

பிபாஷா பாசு திருமண வாழ்க்கை:

1979 ஆம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி பிறந்த இவர் ஆரம்ப காலங்களில் இந்தி படங்களில் நடித்த அவர் பிறகு தமிழ், தெலுங்கு, பெங்காலி படங்களில் நடித்து இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். மேலும் இவர் ஃபிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

Advertisement

டெல்லியில் பிறந்த இவர் கொல்கத்தாவில் வளர்ந்தார். இவர் முதன் முதலில் 2001ஆம் ஆண்டு அஜ்னபி என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானார். பிபாஷா பாசு இவர் கரண் என்பவரை ஏப்ரல் 16 மாதம் 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிபாஷா கரணுடன் இணைந்து டேஞ்சரஸ் என்ற திர்ல்லர் படத்தில் நடித்துள்ளனர்.

குழந்தையின் உடல் நிலை:

இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வருடம் தான் குழந்தையே பிறந்துள்ளது. தனது குழந்தையின் உடல் நிலை குறித்து “ என் குழந்தைக்கு பிறக்கும் போதே இதயத்தில் இரு துளைகள் இருந்தது நாளடைவில் எங்களுக்கு தெரிய வந்தது, இது குறித்து நானும் எனது கணவரும் குடும்பத்தில் யாரிடமும் கூறவில்லை, எனக்கும் கரணுக்கும் இந்த ஐந்து மாதங்கள் கடினமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

Advertisement

மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர் ஆனால் நாங்கள் வேண்டாம் அதுவே தனாகவே சரியாகிவிடும் என்று எண்ணினோம், அதன் பிறகு சில அராய்ச்சிகளை செய்தோம் பின்னர் அறுவை சிகிச்சைக்கு ஒத்துகொண்டோம். முன்று மாத குழந்தைக்கு ஆறுமணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பட்டது. இது போன்ற நிலைமை எந்த ஒரு தாய் தந்தைக்கும் வரக்கூடாது” என்று பிபாஷா பாசு கூறியிருந்தார்.                         

Advertisement
Advertisement