பழம் பெரும் நடிகை ஜெயந்தி உடல் நிலை குறைவால் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் இன்று காலமானது தமிழ் திரைப்பட துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தற்போது 73 வயதாகும் தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல்,கர்ணன் ,நில் கவனி காதலி ,நீர் குமிழி போன்ற என்னேற்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.இதுவரை 500கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜெயந்தி.

பெங்களூரில் வசித்து வந்த ஜெயந்தி, ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உடல் நிலை குறைவு ஏற்பட்டு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.ஆனால் சில மணி நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார.அவரது இறுதி சடங்கிற்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Advertisement
Advertisement