ஒரு வருடத்திற்கு முன்னரே என்னிடம் பேசிவிட்டார்கள்,விஜய்-62 பட பிரபலம் - வெளியான அதிரடி தகவல்கள்

By Ashok · 23/1/2018
விஜய்-முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் படம் விஜய்-62. இந்த படத்தில் மீனவர்களின் பிரச்சனை குறித்து பேசவுள்ளார் விஜய். கடந்த சில நாட்களுக்கு முன்னர் படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. மேலும், சென்னை முட்டுக்காடு பகுதியில் ஒரு செட் போடப்பட்டுள்ளது. சூட்டிங் துவங்கி இன்ட்ரோ சாங் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு வசனம் எழுத தன்னை ஒரு வருடத்திற்கு முன்னரே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள் என ஜெயமோகன் கூறியுள்ளார். மேலும், படத்தில் அனைத்து வசனங்களையும் எழுதி முடித்திருக்கிறார் ஜெயமோகன். தற்போது படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இந்த வருட தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய மும்முரமாக உழைக்க ஆரம்பித்துள்ளது படக்குழு
Tamil Behind Talkies AMP · Quick view
View full