பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருப்பவர் ஓவியா.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்தான் வெற்றிப்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களுக்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
பின்னர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து டிவீட்டும்,பேஸ்புக்கில் வீடியோவும் பதிவுசெய்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்ஓவியா ஹீரோயினாக நடித்து வெளிவர இருக்கும் படம் போலீஸ் ராஜ்யம்.

மலையாளத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் நடிகர் பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா,பாபுராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

மலேசியாவில் ஓவியாவிற்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பிக்பாஸிற்கு பின் உருவாகியுள்ளது எனவே ஓவியாவின் மலேசிய ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு போலீஸ் ராஜ்ஜியம் படத்திற்கான பிரிமியர் ஷோவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

இதையும் படிங்க: ஓவியாவுடன் இணைந்து நடிக்கப்போகிறார் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள்.!

வெளிவரவிருக்கும் போலீஸ் ராஜ்யம் செப்டம்பர் 22 அன்று தமிழகத்தில் ரீலீஸ் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஓவியாவுடன் இணைந்து நடிக்கப்போகிறார் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள்

Advertisement

தமிழகத்தில் 250 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் போலீஸ் ராஜ்யம் ரீலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement