கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு புகழை பெற்றுத்தந்தோ இலையோ நடிகை ஓவியத்திற்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. நடிகை ஓவிய பல தமிழ் மற்றும் தெலுகு படத்தில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிக பெரிய புகழை பெற்றுத்தந்தது. ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டதை வெல்லவில்லை என்றாலும் பல மக்கள் மனதை வென்றுவிட்டார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அம்மணிக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஆகிவிட்டது. தற்போது டிவி விளம்பரங்கலில் நடிப்பது, நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்வது என்று படு பிஸியாக மாறிவிட்டார் இந்த கேரளத்து அம்மணி. அவ்வளவு ஏன் விஜய் டிவியில் இவருக்கென்று பிரத்யேக நிகழ்ச்சிகளை எல்லாம் கூட நடத்தினர். இந்நிலையில் தற்போது தமக்கு இருக்கும் டிமாண்டை புரிந்து கொண்டு தனது சம்பளத்தை உயிர்த்தியுள்ளார் ஓவியா. இதனால் வைபவ் நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தின் வாய்ப்பை இழந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

தமிழில் கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய டீகே தற்போது வைபவ் நடித்து வரும் ஆர். கே நகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா என 3 ஹீரோயின்கள் ஏற்கனவே கமிட் ஆகியுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும் இந்த படத்தில் 4 வது ஹீரோயினாக நடிகை ஓவியாவை கமிட் செய்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளாராம் ஓவியா. இதனால் அந்த படத்தில் அவரை கமிட் செய்யமுடியாமல் போக தற்போது 4வது ஹீரோயினியாக யாரை போடலாம் என்று தேடி வருகிறாராம் இயக்குனர். இதனால் நடிகை ஆத்மிகா ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisement