தளபதி விஜய் கூறிய பொன்மொழியை தன் ஸ்டைலில் பேசிய ஓவியா - தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்

By Ashok · 22/1/2018
முன்னரே நடிகையாக இருந்தாலும் பிஸ் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர்தான் ஓவியா ரொம்பவும் பேமஸ் ஆனார். அதன் பின்னர் மக்களின் அனுதாப அலையில் நனைந்த ஓவியாவின் மார்க்கெட் எகிறியது. அவருக்கு இருக்கும் சூட்டிற்கு தற்போது படம் நடித்தால் கோடிகளில் சம்பளம் கேட்கலாம். அவ்வளவு மவுஸ் இருக்கிறது ஓவியாவிற்கு. ஆனால் காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தில் மட்டுமே கமிட் ஆகியுள்ளார் ஓவியா. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா, நம்மை எல்லோருக்கும் பிடித்துவிட்டால் வாழ்க்கை போர் அடித்துவிடும். எனக் கூறினார். இது எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதே என்று பார்த்தால். மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கூறிய அதே பொன்மொழி தான் என தெரியவந்தது. இதனை வைத்து தற்போது பல மீம்ஸ்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full