திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு அதிகாரி ஒருவரை ஜாதி சொல்லி திட்டியது குறித்து இயக்குனர் பா ரஞ்சித் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் காலம் காலமாக ஜாதிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட படங்கள் வெளிவந்தாலும் நிஜத்திற்கு நெருக்கமான அரசியல் சினிமா படத்தை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சினிமா விவாதங்களை உருவாக்குபவர் இயக்குனர் பா ரஞ்சித். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

Advertisement

பா. ரஞ்சித்தின் திரைப்பயணம்:

மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார். இவர் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. தற்போது வெளிவந்த ரைட்டர் படமும் இவருடைய தயாரிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வந்தார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குதிரைவால் படம் பற்றிய தகவல்:

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் மனோஜ் லயனல் ஜோன்சன், ஷியாம் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருந்த குதிரைவால் படத்தை ரஞ்சித் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவிற்கு ஒரு முழுக்க முழுக்க ஒரு புதுமையான படைப்பு என்றாலும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

Advertisement

அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்த காரியம்:

இந்த நிலையில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் பதிவு போட்டிருக்கிறார். அது என்னவென்றால், திமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன். இவர் சில தினங்களுக்கு முன்பு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இதற்கு முக்கிய காரணமான அரசு அதிகாரி ஒருவரை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஜாதியை சொல்லி திட்டி இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரலானது.

Advertisement

இயக்குனர் பா ரஞ்சித் பதிவிட்ட பதிவு:

இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம் (அயோக்கிய தனம்) ! சாதியை அறிந்தவர் எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்ச்சிக்கிறார்! அறியாதவன் திரு. ராஜ கண்ணப்பன் ஆகிறார்! என்று பா ரஞ்சித் பதிவு செய்துள்ளார். இப்படி ரஞ்சித்தின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement