தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் பா ரஞ்சித். இவர் இயக்கிய அட்டகத்தி என்ற முதல் திரைப்படத்தின் மூலமே மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் மெட்ராஸ், பின்னர் தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்தது. கடைசியாக இவர் சார்பட்டா பரம்பரை இயக்கியிருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இவர் முதல் முறையாக தளபதி விஜயை வைத்து சூப்பர் ஹீரோ என்ற படத்தை இயக்க உள்ளார். தளபதி விஜயின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மாஸ்டர். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் beast என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் நேர்காணல் ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் விஜய்யின் சூப்பர் ஹீரோ படத்தை குறித்தும், தன்னுடைய திரைப்பட அனுபவத்தை குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, விஜய் அவர்களை வைத்து நான் சூப்பர் ஹீரோ படம் எடுக்கிறேன். சூப்பர் ஹீரோ என்றால் மர்மமான சக்திகளை கொண்டவரல்ல. தனது பிரச்சனைகளை சாதாரண மனிதர்களாக முடியாது என்று நினைத்தாலும் தனக்குள் முடியாது என்று நினைக்காமல் தன்னுடைய பிரச்சனைகளை எதிர்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஹீரோ தான். சூப்பர் ஹீரோ என்றால் அமானுஷ்ய சக்தியோ, வேற ஏதாவது ஒரு சக்தி கிடைப்பதோ கிடையாது.

வீடியோவில் 23 நிமிடத்தில் பார்க்கவும்

கற்பனைக்கும் நிஜத்துக்கும் உள்ள ஒரு தொடர்பை தான் நான் இந்த படத்தில் காண்பிக்க இருக்கிறேன். முழுவதும் கற்பனை கிடையாது. அதேபோல் நான் இயக்கிய படங்கள் அனைத்திலும் எனக்கு பிடித்த மாதிரி கதைகளை மக்களுக்கு பிடிக்கும் வகையில் கொண்டுபோய்ச் சேர்த்து உள்ளேன். அதனால் தான் மக்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முழுக்க முழுக்க எனக்கு பிடித்த கதையை மக்களுக்கு எந்த வகையில் கொண்டு போனால் பிடிக்குமோ என்ற அந்த உணர்வைப் புரிந்துகொண்டு நான் கதைகளைக் கொண்டு போய் இருக்கிறேன்.

Advertisement

அதனால் தான் என்னுடைய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வெற்றியைப் பெற்றது என்று உணர்ச்சி பூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தளபதி விஜய் மற்றும் ரஞ்சித் ஆகியோரின் கூட்டணியில் வரும் படம் வேற லெவல்ல இருக்கப் போகும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தளபதி விஜய் மற்றும் ரஞ்சித் ஆகியோரின் கூட்டணியில் வரும் படம் வேற லெவல்ல இருக்கப் போகும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Advertisement
Advertisement