திபீகாவின் தலைக்கு 5 கோடி! பிரச்சனைக்கு காரணமான அந்த பத்மாவதியின் உண்மை கதை !

By Ajju · 22/11/2017
பாலிவுட்டின் தேசிய விருது இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சாகித் கபூர், தீபிகா படுகோன், ரன்விர் சிங் என பல நட்சத்திரங்கள் சேர்த்து பிரம்மாண்டமாக தயாரானது தான் இந்த பத்மாவதி படம். படம் ரிலீசிற்கு முன்னர் திடீரென கதையை புனைத்து எழுதி படம் எடுக்கப்பட்டுள்ளதாக மத அமைப்புகள் படத்திற்கு தடை விதிக்கும் படி போராட்டம் நடத்தி வருகின்றன. திபீகாவின் தலைக்கு 5 கோடியும் இயக்குனர் சஞ்சய் தலைக்கு 10 கோடியும் தருவதாக பல அமைப்புகள் அறிவித்து போராட்டத்தை உக்கிரப்படுத்தியுள்ளன. அப்படி என்னதான் படத்தில் பிரச்சனை என்றால்: கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பத்மாவதி என்ற அரசி பேரழகியா இருக்கிறாள். அவரை சுயம்வரத்தில் திருமனம் செய்துகொள்கிறார் சித்தூர் அரசன் ராணா ரத்தன் சிங். இந்த விசயம் அறித்த டெல்லியை ஆண்ட அலாவுதின் பத்மாவதியின் பேரழகை அடைய நினைத்து பத்மாவதியை அடைய வருகிறான். ஆனால், ராணியை பார்த்ததும் பத்மாவதியின் கணவன் ராணா ரத்தன் சிங்கை கடத்தி சென்று பத்மாவதியைக் கேட்கிறான். ஆனால், பத்மாவதி ஒரு படையைத் திரட்டி சென்று டெல்லியில் அலாவுதினின் படையை அழித்து தன் கணவன் ராணாவை மீட்கிறாள். இதனால், அவமானப்பட்ட அலாவுதின் கில்ஜி பெரும் படையை திரட்டி சித்தூரை அழிக்க புறப்படுகிறான். இதனை சமாளிக்க முடியாது என அறிந்து 16000 பெண்களுடன் தீயிட்டு தன்னை எரித்துக் கொள்கிறாள். இது தான் கதை, இதனை தான் 'எப்படி எங்கள் மத அரசியை நீ அப்படி காட்டலாம் என பல மத அமைப்புகள் போர்கொடி தூக்கியுள்ளன.
Tamil Behind Talkies AMP · Quick view
View full