திருமணத்தை நிறுத்த குமார் செய்த மோசமான வேலை, அரசி என்ன செய்ய போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 16/5/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் என்ன செய்வதென்று புரியாமல் தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து நடந்ததை சொன்னார். அதற்கு அவர், எதற்கு உண்மை சொன்னாய்? என்று திட்டி இருந்தார். வேறு வழியே இல்லை என்று தங்கமயில் அழுதார். அதற்கு பின் அந்த இடத்திற்கு வந்த சரவணன், உன் மீது எனக்கு நம்பிக்கையே இல்லை. நீ எது சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். இதனால் வீட்டில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தான் நான் வந்தேன். இனி நமக்குள் எந்த உறவும் கிடையாது. அரசி கல்யாணம் முடியட்டும் என்று தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே கல்யாண வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சரவணன், தங்கமயில் இனி வேலைக்கு போக வேண்டாம். கல்யாணம் முடியும் வரை அம்மாவுடன் இருக்கட்டும் என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சரி என்று ஒத்துக் கொண்டார்கள்.
இன்னொரு பக்கம் பைக்கில் தன்னை கதிர் அழைத்து போகாது நினைத்து ராஜி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த கதிர், ராஜியை எழுப்பி பைக்கில் அழைத்து லாங் ட்ரைவ் சொன்னார்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் கல்யாணத்திற்கு துணி எடுப்பதற்காக பாண்டியன் எல்லோரையும் அழைத்தார். அப்போது கோமதி, எல்லோருமே போயிட்டு வாருங்கள். வீட்டில் இருக்கும் வேலையை நான் பார்க்கிறேன் என்று சொன்னார். உடனே சரவணன், நீங்கள் வீட்டில் எப்படி தனியாக சமாளிப்பீர்கள்? தங்கமயில் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொன்னார். அதற்கு பாண்டியனும் ஒத்துக்கொண்டார்.
அதற்குப் பின் ரூமில் தங்கமயில், சரவணனிடம் மன்னிப்பு கேட்டார். சரவணன், என் தங்கை கல்யாணம் முடியும் வரை நமக்குள் எந்த பேச்சு வார்த்தையுமே வேண்டாம்.

நேற்று எபிசோட்:

உனக்கு இந்த வீட்டில் எந்த உரிமையும் கிடையாது. அரசி கல்யாணம் முடிந்த உடன் எல்லா விஷயத்தையும் நான் அப்பா அம்மாவிடம் சொல்லப் போகிறேன். அதற்குப்பின் எதுவாக இருந்தாலும் அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொன்னார். தங்கமயில், இதனால் ரொம்பவே உடைந்து போனார். பின் வீட்டில் வேலை எல்லாம் முடித்து சரவணனுக்காக சாப்பாடு எடுத்துக்கொண்டு தங்கமயில் சொன்னார். அதற்கு சரவணன், தங்கமயிலை மோசமாக திட்டி அனுப்பி விட்டார். இதனால் வேதனையில் தங்கமயில் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார். அவர்களுமே அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். இன்னொரு பக்கம் குமார், அரசியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று தாங்கள் இருவரும் எடுத்த போட்டோவை தவறாக எடிட் பண்ணி தர சொன்னார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கல்யாணத்திற்கு தேவையான உடைகளை எல்லாம் எடுத்து கொண்டு பாண்டியன் குடும்பம் வருகிறார்கள். அப்போது செந்தில்- கதிர் இருவருமே அரசி திருமணத்தை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்கள். அதற்கு பின் அரசி தன்னுடைய கல்யாண புடவை எல்லாம் எடுத்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது வந்த சுகன்யா, அரசி குமாருடன் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை காண்பிக்கிறார். அதை பார்த்தவுடன் அரசி ஷாக் ஆகிறார். உடனே சுகன்யா, இந்த வேலையெல்லாம் நீ செய்துவிட்டு வேறு ஒரு திருமணமா? என்று கேட்கிறார். அதற்கு அரசி, நான் எதுவும் செய்யவில்லை. இந்த போட்டோ உண்மை இல்லை என்று கதறுகிறார். பின் குமாரிடம் போன் பேச சொல்கிறார் சுகன்யா. ஆனால், அரசி முடியாது என்கிறார்.

சீரியல் ட்ராக்:

சுகன்யா வலுக்கட்டாயமாக குமாரிடம் அரசியை பேச வைக்கிறார். அப்போது குமார், நீ என்னை தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால் இந்த போட்டோவை ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டுவேன் என்று மிரட்டுகிறார். அந்த சமயம் பார்த்து ராஜி உள்ளே வந்தவுடன் சுகன்யா போனை வாங்கிக் கொண்டு வெளியே சென்று விடுகிறார். அப்போது ராஜி, சித்தி ஏதாவது சொன்னார்களா? குமார் ஏதாவது பிரச்சனை செய்கிறானா? என்று கேட்கிறார். ஆனால், அரசி எதுவும் இல்லை என்று சமாளிக்கிறார். பின் தன்னுடைய அப்பாவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடலாம் என்று அரசி வெளியே வருகிறார். பாண்டியன், மகளின் திருமணத்தை பற்றியும் மாப்பிள்ளை பற்றியும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் அரசி எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full