தங்கமயிலால் வேதனையில் இருக்கும் சரவணன், பாண்டியன் சொன்ன வார்த்தை-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 19/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், நான் லோன் வாங்கி தருவேன். உன்னுடைய விருப்பத்திற்கு எல்லாம் ஆட முடியாது என்று கண்டிஷன் போட்டார். இதைக் கேட்டு கோபப்பட்ட கதிர் தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். கோமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் கதிர், அப்பா எனக்கு எந்த உதவியும் செய்ய தேவையில்லை. நீங்களே சொல்லிடுங்க என்றார். உடனே கோமதி, நீங்கள் எந்த கையெழுத்தும் போட்டு தர தேவையில்லை. அவனே பார்த்துக்கொள்ளட்டும் என்று சொன்னார். பாண்டியனும் கோபத்தில் திட்டி விட்டு சென்று விட்டார்

கதிர், சரவணன், செந்தில் மூவருமே கடையில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பாண்டியன், என்ன விஷயம் என்று கேட்டார். அதற்கு சரவணன், சும்மா என்று சமாளித்து விட்டார். அதற்குப்பின் சரவணன், தங்கமயிலுக்கு கிப்ட் வாங்குவதற்காக பணம் கேட்டார். பாண்டியனுமே எதுவும் சொல்லாமல் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார். உடனே சரவணன் அந்த பணத்தை வைத்து தங்கமயிலுக்காக ஒரு நல்ல புடவையை வாங்கிக் கொண்டார். இன்னொரு பக்கம் தங்களுடைய அன்னிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக செந்தில்,கதிர் இருவருமே கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் தங்கமயிலுக்கு சப்ரைஸ் கொடுக்க வீட்டை அலங்காரம் செய்து வைத்தார்கள். அப்போது வீட்டிற்கு வந்த பாண்டியன், எதற்காக இந்த அலங்காரம்? என்று கேட்டார். தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் இப்படி செய்கிறோம் என்று சொன்னார்கள். பின் கோயிலில் இருந்து கோமதி, தங்கமயில் இருவருமே வீட்டுக்கு வந்தார்கள். அப்போது மீனா, உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் சரவணன் மாமா இதை செய்தார் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் சந்தோஷத்தில் தங்கமயிலை பிடிக்க முடியவில்லை. அதற்குப்பின் சரவணன் தான் வாங்கிய கிப்ட்டை தங்கமயிலுக்கு கொடுத்தார். அந்த புடவையை பார்த்து தங்கமயில் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

நேற்று எபிசோட்:

தங்கமயில் கர்ப்பமாக இருப்பதால் கேக் வெட்டி குடும்பமே சந்தோஷமாக கொண்டாடினார்கள். அதற்கு பின் ரூமில் சரவணன், தங்க மயிலுக்கு மல்லி பூ வாங்கி தந்தார். பின் இருவருமே குழந்தையை பற்றி ரொம்ப எமோஷனலாக பேசினார்கள். மறுநாள் காலையில் தங்கமயிலின் செக்கப்பிற்காக சரவணன் குடும்பத்தில் கிளம்பினார்கள். குழந்தையை பார்க்கும் ஆர்வத்தில் சரவணன் ரொம்பவே எதிர்பார்த்து இருந்தார். ஹாஸ்பிடலுக்கு தங்கமயில் அம்மா, கோமதி, ராஜி, கதிர் எல்லோருமே சென்றிருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

நேற்று எபிசோட்டில் ஹாஸ்பிடலில் தங்க மயிலை செக் செய்த டாக்டர், தங்கமயில் கர்ப்பமாகவே இல்லை. அது சில கிட்டில் இப்படித்தான் தவறான ரிசல்ட் வரும் என்றார். இதை கேட்டவுடன் சரவணன் ஆடிப் போனார். கோமதி, தங்கமயில் அம்மா எல்லோருமே ரொம்பவே வருத்தப்பட்டார்கள். தங்கமயில் ஹாஸ்பிடல் என்று கூட பார்க்காமல் கதறி அழுதார். வேதனையில் சரவணன் அங்கு இருந்து கோபமாக சென்று விட்டார். உண்மை அறிந்து வீட்டில் உள்ள எல்லோரும் வருத்தப்பட்டார்கள். பின் வீட்டிற்கு வந்த தங்கமயில் அழுது கொண்டே இருந்தார். சரவணன், தங்கமயில் இடம் பேசாமல் வேலைக்கு கிளம்பி விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன் தேம்பி தேம்பி அழுகிறார். பாண்டியன், ஹாஸ்பிடலில் என்ன சொன்னார்கள்? என்கிறார். உடனே கதிர் நடந்ததை எல்லாம் சொல்கிறார். வேதனை தாங்க முடியாமல் சரவணன் அழுகிறார். பாண்டியனுமே சரவணனுக்கு ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் விஷயம் தெரிந்து வீட்டிற்கு வந்த மீனா, தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே குழந்தை நினைத்து ரொம்பவே எமோஷனலாக அழுது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் பாண்டியன், தங்கமயிலுக்கு அறிவுரை சொல்கிறார். இருந்தாலுமே சரவணன்-தங்கமயில் மனமுடைந்து அழுது கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் இந்த விஷயத்தை சுகன்யா, குமார் வீட்டில் சொல்கிறார். இதை கேட்டு சக்திவேல் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full