மீனாவை அவமானப்படுத்திய பாண்டியன், உண்மையை உளறிய தங்கமயில், கண்டுபிடிப்பாரா சரவணன்?பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜியின் சித்தப்பாவிற்கு டியூசன் எடுக்கும் விஷயம் தெரிந்து தன் அண்ணனிடம் சொல்லி இருந்தார். இதனால் ஆத்திரத்தில் இருவருமே பாண்டியனிடம் சண்டை போட்டார்கள். அப்போது ராஜி செய்த வேலை தெரிந்து மொத்த பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தார்கள். பின் வீட்டில் கோமதி பயங்கரமாக ராஜுவை திட்டிக் கொண்டிருக்க, கதிருக்கு கோபம் வந்து ராஜியிடம் கத்துகிறார். கடைசியில் எல்லா உண்மையும் மீனா உளற பாண்டியனுக்கு கோபம் அதிகமாகி திட்டி இருந்தார்.
மொத்த குடும்பமே மீனா- ராஜிக்கு எதிராக நின்றது. அதன் பின் கோமதியிடம் ராஜி, மீனா இருவருமே மன்னிப்பு கேட்டும் அவர் முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிக் கொண்டிருந்தார். அதோடு இந்த விவகாரம் எல்லாம் சரவணன்-தங்கமயிலுக்கு தெரிந்து விட்டது. பின் வீட்டிற்கு வந்த சரவணன்- தங்கமயில் நடந்த சண்டையை பற்றி தான் பேசி இருந்தார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று தங்கமயில், மீனா- ராஜுவை பயங்கரமாக குறை சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் நகையை பேங்கில் இருந்து எடுக்க கோமதி, தங்கமயில் போனார்கள். வீட்டில் ராஜி-மீனா இருவருமே நடந்ததை பற்றி ரொம்பவே வருத்தப்பட்டு பேசி இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் பேங்கில் இருந்து மொத்த நகையும் வீட்டுக்கு கோமதி எடுத்து வந்து விடுகிறார். பின் அவரவர்கள் நகையை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஜாடை மாடையாக மீனாவை வம்புக்கு இழுத்தார். மீனாவும் தன்னுடைய மாமியாரை எவ்வளவோ சமாதானம் செய்ய பார்க்கிறார். ஆனால், அவர் சமாதானமே ஆகவில்லை. அப்போது தங்கமயில், தன்னுடைய நகைகளை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார். பின் ராஜியின் மொத்த நகையையும் சித்தப்பு கொண்டு போய் அவருடைய அண்ணன்கள் இடம் கொடுத்து பாண்டியன் தரப்பு நியாத்தை சொல்கிறார். ஆனால், அவர்கள் பாண்டியனை திட்டி விடுகிறார்.
சீரியல் கதை:
நேற்று எபிசோடில் நகையை போட சொல்லி ராஜி அப்பா கட்டாயப்படுத்த, வடிவு முடியாது என்று இருவருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது. இன்னொரு பக்கம் மீனா, ராஜி இருவரும் நகையை பற்றி பேசிக் கொண்டிருக்க, தங்கமயில், என் நகையை போட்டுக்கொள் என்றவுடன் ராஜு வேணாம் என்று சொல்கிறார். அப்போது கோமதி பேங்கில் நகையை வைக்கலாம் கொடு என்று சொன்னவுடன் தங்கமயில் தடுமாறுகிறார்.
நேற்று எபிசோட்:
பின் பாண்டியன் வீட்டில் உட்கார்ந்து பேசும்போது, மீனா தண்ணீர் கொடுக்க பாண்டியன் வாங்காமல் அமைதியாக இருக்கிறார். பின் பாண்டியன், தங்கமயில் இடம் தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார். இதையெல்லாம் பார்த்து மீனா வருத்தப்படுகிறார். அதன் பின் வீட்டில் ராஜி-கதிர், செந்தில்- மீனா இடையே சண்டை வந்து நான்கு பேரும் பேசிக் கொள்ளாமல் தனி தனியாக தூங்குகிறார்கள். பின் மீனா-ராஜி இருவரும் நடந்தை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
அதை கோமதி யாருக்கும் தெரியாமல் கேட்டு வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் தங்கமயில், தன் அம்மாவிற்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். அப்போது நகை கருப்பான விஷயத்தை பற்றி சொல்லி பயப்படுகிறார். உடனே அவர் அம்மா சமாதானம் செய்கிறார். அந்த சமயம் பார்த்து சரவணன் வந்து என்ன விஷயம்? என்று கேட்க, தங்கமயில் ஏதோ கதை சொல்லி சமாளிக்கிறார். சரவணன் நம்பி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.