கதிர்-ராஜி திருமணத்தில் மறைந்த ரகசியத்தை அறிந்த இரு வீட்டார், அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 1/8/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, என்னுடைய நகைகளை விற்று கதிரின் தொழிலுக்குகொடுக்கலாம் என்று இருக்கிறேன் என்றார். அதற்கு மீனாவுமே சரி என்றார். பின் மீனாவுக்கு வேலை வந்ததால் கிளம்பிவிட்டார். பின் ராஜி பேங்கில் நகையை கொடுத்துவிட்டு வைப்பதற்கான வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு வந்த சக்திவேல் ராஜியை பார்த்து விட்டார். பேங்கில் இருபவர்களிடம் எதற்காக ராஜி வந்தார் என்ற விஷயத்தை விசாரித்து சக்திவேல் தெரிந்து கொண்டார். உடனே சக்திவேல் அங்கு வேலை செய்பவர்களிடம், பணத்தை பிறகு தருகிறேன் என்று சொல்லி அனுப்புங்கள் என்றார்.

அதையும் நம்பி ராஜி சென்று விட்டார். பின் கோபத்தில் அந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சக்திவேல் நடந்த எல்லாத்தையும் தன்னுடைய அண்ணன் இடம் சொன்னார். பின் ராஜி நகையை விற்க வந்த விஷயத்தை வீட்டிற்கு வெளியே வந்து சக்திவேல் பாண்டியனையும் அவர் குடும்பத்தையும் வெளியே வர சொல்லி கத்திக் கொண்டிருந்தார். அப்போது கதிர்-ராஜி இருவரும் வெளி வருகிறார்கள். சக்திவேல் நகை விஷயத்தை தான் பேச வந்திருக்கிறார் என்று ராஜி தெரிந்து கொண்டார். இதனால் இவர் மீனாவிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பாண்டியன் வருவதற்காக சக்திவேல் காத்துக் கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோடில் பாண்டியன் வீட்டில் எல்லோருமே வந்து விட்டார்கள். இருந்தாலும் பாண்டியன் வரவில்லை என்று சக்திவேல் அமைதியாக இருந்தார். பாண்டியன் மகன்கள் எல்லோருமே என்ன பிரச்சனை? எதற்காக இப்படி தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்துவிட்டார். அப்போது சக்திவேல், நகை திருட்டுப் போய்விட்டது. நகை கிடைத்த உடனே திரும்பி கொடுப்பதாக சொன்னீர்கள். எங்கள் வீட்டு பொண்ணை ஏமாற்றி அவளை அனுப்பி நகையை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். இதைக் கேட்டு பாண்டியனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே ராஜி, இதற்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் தான் கதிர் பிசினஸ்க்காக நகையை வைக்கப் போனேன்.

நேற்று எபிசோட்:

நகை கிடைத்த விஷயம் கூட வீட்டில் யாருக்கும் தெரியாது என்று சொன்னார். இருந்தாலுமே, சக்திவேல் குடும்பத்தில் யாருமே நம்பவில்லை. பின் சக்திவேல், கதிரை ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட ராஜி, என்னுடைய திருமணத்தால் ஒரு விஷயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக பொய் மேல் பொய் சொல்லியும் இருக்கிறேன். என்னுடைய திருமணத்தில் நடந்த விஷயத்தை தெரிந்தால் இப்படி எல்லாம் நீங்கள் பேச மாட்டீர்கள். உங்கள் மானம் கௌரவத்தை கதிர் தான் காத்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னார். இதை எல்லாம் கேட்டு முத்துவேலுக்கு புரியவில்லை. ராஜி உண்மையை சொல்லி விடுவாளோ என்று கோமதி, மீனா இருவருமே பதறினார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் ராஜி, உண்மையாலுமே நான் காதலித்தது வேறு ஒருவரை, கதிர் கிடையாது. நான் திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்தேன். நீங்கள் அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடு செய்ததால் நான் அந்த நபருடன் வீட்டை விட்டு போய்விட்டேன். ஆனால், போன பிறகு தான் அந்த ஆள் மோசமானவன் என்று தெரிந்தது. அவன் என்னை ஏமாற்றி நகைகளை எல்லாம் எடுத்துவிட்டு ஓடிவிட்டான். எனக்கு அப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. செத்துப் போய்விடலாம் என்று நினைத்தேன். அந்த சமயம் தான் திருச்சிக்கு கதிர் வந்திருந்தார். கதிர், என்னிடம் நடந்ததை பற்றி கேட்க, எல்லாத்தையும் நான் சொன்னேன். அதற்கு பின் என்னை வீட்டில் விடுவதாக சொன்னார். நான் தான் உங்கள் மீது இருந்த பயத்தில் வரவில்லை.

சீரியல் ட்ராக்:

பின் கதிரிடம் நான்தான் என்னை திருமணம் செய்து கொள்ள கேட்டேன். எனக்காகவும் நம்முடைய குடும்பத்தின் மானத்திற்காகவும் தான் கதிர் திருமணம் செய்து கொண்டார். மற்றபடி கதிரும் நானும் காதலிக்கவில்லை. கல்யாணத்திற்கு முன்னாடி வரை எனக்கு கதிரை பிடிக்கவே பிடிக்காது. இதுதான் உண்மையான சத்தியம் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் இரு வீடுமே ஆடிப் போய் எதுவுமே பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள் பாண்டியனும் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார்கள். பின் ராஜியும் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறார். பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாகி விடுகிறார். இன்னொரு பக்கம் கோமதி, மீனா இருவருமே தங்களுடைய பெயர் வெளியில் வரவில்லை என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full