நான் செய்த உதவியை முத்தையா மறந்து விட்டார் என்று மன வேதனையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ரவிச்சந்திரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். டிஆர்பியில் இந்த சீரியல் தான் முன்னிலையில் வகுத்து வருகிறது. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், இந்த சீரியலில் மீனாவின் தந்தையாக ஜனார்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ரவிச்சந்திரன்.

Advertisement

ரவிச்சந்திரன் குறித்த தகவல்:

இவர் இந்த சீரியலுக்கு முன்பே பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் நம்ம வீட்டு மீனாட்சி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இவர் நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் ரவிச்சந்திரன் கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் மசாலா கம்பெனி ஒன்றை நடத்தி வந்து இருந்தார். ஆனால், அந்த தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டு அதனால் தன்னுடைய சொந்த ஊரை விட்டு கிளம்பி வேலை தேடி சென்னை வந்தார் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரன் திரைப்பயணம்:

பின் நண்பர்கள் மூலம் தான் இவர் பல விளம்பர படங்களில் நடித்து இருந்தார். அப்படியே அவருக்கு டிவி, சினிமா என்று வாய்ப்புகள் வந்தது. தற்போது இவர் சின்னத்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ரவிச்சந்திரன் பேட்டி அளித்து ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் முத்தையா குறித்து சொன்னது, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இயக்குனர் முத்தையாவிற்கு நான் உதவி செய்து இருக்கிறேன். அந்த உதவியின் மதிப்பு குறைவாக இருந்தாலும் அந்த சமயத்தில் செய்தது பெரிய விஷயம் என்று அவரே என்னிடம் பலமுறை கூறினார்.

Advertisement

முத்தையா குறித்து சொன்னது:

அதற்கு பின் தான் அவர் இயக்குனரானார். அவரின் முதல் படமான குட்டி புலி படத்தின் போதே அவரிடம் வாய்ப்பு கேட்டு சென்றேன். ஆனால், அவர் கொடுக்கவில்லை. இரண்டாவது, மூன்றாவது, நான்காவது படம் என்று தொடர்ந்து அவரிடம் வாய்ப்பு கேட்டு சென்றேன். ஆனால், அவர் வாய்ப்பே தரவில்லை. இதனால் நான் மனமுடைந்து விட்டேன். செய்த உதவியை இப்படியெல்லாம் கூட மறப்பார்களா? அதற்குப் பிறகு நான் அவரிடம் வாய்ப்பு கேட்கவில்லை என்று கூறி இருந்தார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக முத்தையா திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

முத்தையா குறித்த தகவல்:

இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த குட்டிப்புலி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனர் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்திருந்த படம் விருமன். இந்த படத்தில் அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது.

Advertisement