தொகுப்பாளினியும் நடிகையுமான சித்ராவிற்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது நாம் அனைவரும் அறிந்ததே. விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிகளை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. இந்த தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான் இதில் முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.

நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

Advertisement

தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.சித்ராவிற்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கடந்த மாதம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள GPN பேலஸில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. அடிக்கடி இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை கூட பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் இவர்களின் திருமணம் பற்றிய தேதி இதுவரை வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பெயரை சித்ரா காமராஜ் என்று மாற்றியுள்ளார் சித்ரா. இதற்கு முக்கிய காரணமே நடிகை விசித்ராவின் இன்ஸ்டாகிராம் கணக்கை வெரிஃபை செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இதனால்தான் தன்னுடைய ஒரிஜினல் பெயரை பதிவிட்டிருக்கிறார். சித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement
Advertisement