விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் குமரன் – சித்ரா நடித்து வந்த கதிர் – முல்லை கதாபாத்திரத்தாம் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று வேண்டும். நடிகர் குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு முன்னர் சில சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு மிகபெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். நடிகர் குமரன், சீரியல் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஜோடி நம்பர் 1 சீசன் 3 சுஹாசினி, கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ஐயப்பனுடன் ஜோடி சேர்ந்து நடனம் ஆடினார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஐயப்பன் மற்றும் சுவாசித்து ஜோடி எந்த பரிசினையும் எண்ணவில்லை இதையடுத்து சுவாசினி ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான மையம் என்ற படத்தில் நடிகை சுஹாசினி நடித்திருந்தார்.

அதற்கு முன்பாகவே ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார் சுஹாசினி . சீரியலில் வாய்ப்பு குறைந்ததால் நடிகை சுகாசினி, குமரணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான குழந்தையும் பிறந்தது இப்படி ஒரு நிலையில் நடிகை குமரன் – சுஹாசினி தம்பதியினரின் குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைராகி வருகிறது.

Advertisement
Advertisement