உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ் . உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் பயங்கர பீதியில் உள்ளார்கள். சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது இந்த கரோனா வைரஸ் தாக்குதலினால் மூவாயிரத்துக்கும் மேல் உயிரிழந்து உள்ளார்கள்.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் மூன்று பேருக்கு இந்த கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது இரண்டு பேர் இந்த கரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லிக்கு திரும்பிய ஒருவரும், தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்கும் இந்த கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா வைரஸ் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பதிவு ஒன்றை செய்திருக்கிறார்.

Advertisement

இதையும் பாருங்க : என்னுடைய இரண்டாவது அம்மா இறந்துட்டாங்க. வனிதா போட்ட வித்யாசமான இரங்கல் பதிவை நீங்களே பாருங்க.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரில் பல்வேறு ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் அது கதிர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் மற்றும் சித்ராவைத்தான். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளம் ரசிகர்களையும் கொண்டிருக்கிறார். மேலும், இவருக்கு முல்லை என்ற பெயரில் இளம் ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் ஒரு பக்கத்தை கூட ஆரம்பித்து இருக்கிறார். மேலும் அவ்வப்போது அவர் பரிசுகளை கூட சித்ராவிற்கு அனுப்பியுள்ளார்.

Advertisement

இப்படி ரசிகர்களின் அன்பு மழையால் நனைந்து வரும் சித்ரா, அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் இதுவரை சென்ற பயணத்திலேயே மிகவும் சுவாரசியமான பயணம் எது என்று கேட்டிருந்தார். அதற்கு ஜப்பான் என்று பதிலளித்து ஜப்பானில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்ட முல்லை, ஆனால், கொரோனா வைரஸா இப்ப போக பயமா இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement