தென்னிந்திய சினிமா திரை உலகில் வித்தியாசமான முறையில் கதைகளை உருவாக்கி சினிமா துறையில் தனக்கென பாதையும் உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் சினிமா உலகில் நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணிபுரிந்து இருக்கிறார். நடிகர் பார்த்திபன் முழு பெயர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். 10 படங்களை இயக்கியும் உள்ளார். பாலகுரு என்ற இயக்குனருடன் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்து உள்ளார். அதன் பிறகு பாக்யராஜ்ஜுடன் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார் . படிப்படியாக உயர்ந்து 1989ல் புதிய பாதை என்ற படத்தை இயக்கினார் . அதன் பிறகு பல வெற்றி படங்கள் இயக்கி உள்ளார். இவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

Advertisement

தற்போது இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். அபிநயா, கீர்த்தனா, ராக்கி ஆகிய மூன்று பேர் உள்ளார்கள். இரண்டாவது மகள் கீர்த்தனா கண்ணத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் நடித்து உள்ளார் . தற்போது இவர் உதவி இயக்குனராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டு மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சமீபத்தில் இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக “ஒத்த செருப்பு சைஸ் 7” என்ற படத்தில் நடித்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும், ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இதையும் பாருங்க : அஜித் இதை செய்ய வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். யாஷிகா போட்ட ட்வீட். வரவேற்கும் தல ரசிகர்கள்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருக்கிறார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, சினிமா, இந்த சமுதாயம் தான் என்னுடைய குடும்பம். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு பையன் உள்ளார்கள். என் பையன் இயக்குனராக பல முயற்சிகளை செய்து வருகிறான். என்னுடைய மகன், மருமகன், மகள் எல்லாருமே டைரக்டர் ஆகணும்னு ஆசை படுறாங்க. அதற்கான முயற்சியை எடுத்துட்டு வறாங்க.

Advertisement

Advertisement

இசைக்கு எனக்கும் என்ன சம்பந்தம் இல்ல. ஆனால், இசைக்கு மறு பெயர் இளையராஜா. என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு என்று நினைக்கிற தருணத்தில் மொத்தமா என்னை மாற்றியது என் மகள் கீர்த்தனா தான். அவ எனக்கு தெய்வம் தந்த பூ போல. என் மகள் கீர்த்தனா கல்யாணத்தின் போது நான் அழ கூடாது என ஒரு மாதமாக பயிற்சி செய்து இருந்தேன். ஆனாலும், என்னால முடியல. அதோடு என் வாழ்க்கையில் நான் இப்ப திருப்பியும் சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறதுக்கு முழுக்க முழுக்க என் மகள் கீர்த்தனா தான் காரணம். அவளுடைய ஒவ்வொரு வார்த்தைகளும், அட்வைஸ் தான் என்னை இந்தளவுக்கு பூஸ்டப் பண்ணி வச்சிருக்கு. என் மூத்த மகள் அபிநயா உயிர், கீர்த்தனா என் அறிவு, என் மகன் அன்பு. இப்படித் தான் என் குழந்தைகளை நான் பிரித்து வைத்திருக்கிறேன். இவங்க மூணு பேரும் தான் என்னுடைய உலகம் என்று தன் குடும்பத்தின் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் பார்த்திபன் .

Advertisement