ஸ்ரீரெட்டியின் புதிய சர்ச்சையில் சிக்கி சிறழிந்து வரும் பிரபல ஸ்டார் நடிகர் வாழ்க்கை.!

By Rajkumar · 26/5/2019

நடிகர் பவன் கல்யாண் இன்று தெலுங்கு திரைப்பட துறையில் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற நட்சத்திரங்களில் ஒருவராவார். ‘பவர் ஸ்டார்ட்’ என்று அழைக்கப்படும் அவர், தனது அசைக்க  முடியாத திரைச்சீலை, நேர்மையான நடிப்பிற்கும் துணிச்சலான ஆளுமைக்கும் காரணமாக எண்ணற்ற ரசிகர்களை நேசித்தார்

சொல்லப்போனால் பவன் கல்யாண் தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவே திகழ்ந்து வந்தார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பவன் கல்யாண் படு தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி , பவன் கல்யாண் குறித்து பேசுகையில் நிர்வாகத் திறமை கிடையாது,  அரசியலுக்கு தகுதியானவர் இல்லை, பத்தாம் வகுப்பு கூட தேறாத இவர் வைத்திருக்கும் சான்றுகள் அனைத்தும் போலியானவை என்றும் உலக அளவில் ரசிகர்களைக் கொண்ட பவன் கல்யாண் ஆந்திர மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள் என்றும் தேர்தலில் தோற்கடித்து நிரூபித்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி பவன் கல்யாண் மீது இது போன்ற குற்றச்சாட்டை வைப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பவன் கல்யானை திருநங்கை என்று கூறிய ஸ்ரீரெட்டி, பவன் கல்யாணுக்கும் பிரபல நடிகை பூனம் கவுருக்கும் தொடர்பு இருக்கிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இப்படி பவன் கல்யாண் பெயரை தொடர்ந்து கெடுத்து வரும் ஸ்ரீரெட்டி சில எதிர் கட்சிகளின் துணைகொண்டு பவன் கல்யாணின் அரசியல் வாழ்க்கைக்கு ஆப்பு வித்திருக்கிறார் என்றும் தெலுங்கு வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full