பெப்சி உமா என்று சொன்னால் இன்றைக்குக் கூட இளைஞர்கள் துள்ளி குதித்து கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு அவருடைய அழகும், குரலும் ரசிகர்களை கட்டி இழுத்தது. மேலும், 90 கால கட்டங்களில் போன் பிரபலம் இல்லாத காலத்தில் கூட அதிக ரசிகர்களை கொண்டவர். அதோடு அவருடைய சிரிப்பு ,அழகு, குரல் என அவரை புகழாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் சினிமா நடிகைகளை விட கொள்ளை அழகும், ரசிகர்களையும் கொண்டவர். மேலும், என்றும் மாடர்ன் உடைகளை போடாதவர், அதோடு அவர் அழகாக வண்ண வண்ண புடவைகளை உடுத்தி கொண்டால் பொதும் பார்ப்பதற்கு கண்களை கவர வைக்கும். அது தான் அவருடைய கூடுதல் சிறப்பும் ஆகும்.

அதுமட்டும் இல்லாமல் இன்று வரை அவர் இடத்தை யாராலும் பூர்த்தி செய்யவில்லை. மேலும், எந்த விஜே கூட அவருடைய இடத்தை பிடிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர்கள் உமாவிடம் பேசுவதற்காகவே பல நாட்கள் காத்து உள்ளார்கள் என்றும் சொல்வார்கள். அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பெப்சி உமாவுக்கு சினிமா பிரபலங்களுக்கு இணையாக கட் அவுட் எல்லாம் வைத்து உள்ளார்கள்.

Advertisement

அதுமட்டும் இல்லாமல் கேரளாவில் ஒரு ரசிகர் கூட்டம் ஒன்று பெப்சி உமாவிற்கு கோயிலைக் கட்டி உள்ளார்கள். மேலும், ஒரு நிகழ்ச்சியை அதிக வருடங்கள் தொகுத்து வழங்கிய ஒரு தொகுப்பாளரும் ‘பெப்சி உமா’ தான். மேலும், இந்த பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை 15 வருடம் அவர் தொகுத்து வழங்கியுள்ளார். அதோடு ரஜினி, கமல், மணிரத்னம், பாரதிராஜா என தமிழ் சினிமா ஜாம்பவான்களுக்கு எல்லோரும் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பளித்தார்கள். ஆனால்,உமா அவர்கள் எனக்கு விருப்பமில்லை, ஆர்வம் என்று கூறிவிட்டார்.

வீடியோவில் 7 நிமிடத்தில் பார்க்கவும்

Advertisement

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பெப்சி உமா, சினிமாவில் நடிக்க மறுத்த காரணத்தை சொல்லி உள்ளார். அதில், எனக்கு நடிப்பில் பெரிய ஆர்வம் கிடையாது. ஆர்வம் இல்லாமல் ஒரு வேலையை எப்படி செய்வது. எனக்கு ரஜினி சாரின் முத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது அதே போல ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாததால் நான் அந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement